புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 02, 2021)

நாம் நாடுகின்ற துறைமுகம்

சங்கீதம் 107:28

அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்


குறிப்பிட்ட துறைமுகத்தை நாடி ஒரு மனிதன் தன்னிடமிருந்த சிறிய கப்பலிலே தன் குடும்பத்தோடு கடல் யாத்திரையொன்றை ஆரம் பித்தான். மாலை வேளையிலே, கார்மேகங்கள் சூழ்ந்து திடீரென இருள் பற்றிக் கொண்டது. வானத்திலே நட்ச த்திரங்கள் எதையும் காண முடியாதப டிக்கு கார் மேகங்கள் சூழ்ந்திருந்தது. கப்பலை சுக்கான் பிடித்து ஓட்ட முடி யாதபடிக்கு புயல் காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது. தப்பிப் பிழைப்போம் என்ற நம்பிக்கை இழ ந்து போகத்தக்கதாக கப்பல் புயலில் அகப்பட்டிருந்தது. தன்னிடமிருக்கும் பணமோ, பொருளோ அந்தஸ்தோ தன்னையும் தன் குடும்பத்தையும்கா க்க முடியாது என்பதை அவன் உணர்ந்து கொண்டான். பல மணி நேரங்கள் பல முயற்ச்சிகளைச் செய்தும் அவைகள் பலனளிக்காது போனதால், தேவனே எங்களை காத்துக் கொள்ளும் என்று பெலனற்று கண்ணயர்ந்து போகும்வரைக்கும் எல்லோரும் கதறினார்கள். சில மணித்தியாலங்களின் பின் கண்விழித்த அந்த மனிதன், வானத்திலே ஒரு விடிவெள்ளி நட்சத்திரத்தை கண்டு, விடியல் சமீபித்திருக்கின்றது என அறிந்து கர்த்தருக்கு நன்றி செலுத்தினான். மனிதனானவன் தன்னு டைய ஞானத்தினால் பெரிய கப்பல்களை கட்டுகிறான். விஞ்ஞான வளர்ச்சியெனக் கூறிக் கொண்டு ஆகாயத்திலும் தனது படைப்புக்களை பறக்கவிடுகின்றான். ஆனாலும் மனிதர்களின் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது. வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமை தலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோ~ப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறார். உங்கள் வாழ்க்கையில் வரும் சூழ்நிலைகளை கண்டு மனம்தளர்ந்து போகாமல் கர்த்தராகிய இயேசுவின்மேல் நம்பிக்கையாயிருங்கள். நாம் நாடுகின்ற துறைமுகமாகிய பரலோகத்திற்கு அவர் நம்மை கொண்டு சேர்ப்பது அதிக நிச்சயம்.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, பொழுதுவிடிந்து விடிவெள்ளி நம் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற தேவ வசனங்களை பற்றிக் கொண்டிருக்க கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:19-21