புதிய நாளுக்குள்..

தியானம் (தை 24, 2021)

முன்னனுபவம்

வெளி 1:7

பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.


ஒரு தேசத்திலே வாழ்ந்து வந்த மனிதன், தன் இளவயதிலிருந்தே தன் சொத்துக்களை பெருக்கும்படிக்கு, பல முதலீடுகளை செய்து, பல வீடுகளுக்கும் காணிகளுக்கும் சொந்தக்காரனானான். பல தலைமுறை களுக்குரிய செல்வம் அவனிடமிருந்தது. ஒரு இரவிலே, அந்த தேச த்தில் ஏற்பட்ட கொடிய பூகம்பத்தினால், வீடுகள், வளவுகள், வங்கிகள், கட்டிடங்கள், வியாபாரங்கள் யாவும் சில நிமிடங்களுக்குள் இருந்த இடம் தெரியாமல் முற்றாக அழிந்து போய் விட்டது. அவர்கள் வீடுகள் வளவுகள் இருந்த இடம், அவைகளின் அரச உறுதிகள், வங்கிக் கணக்கின் விபரம், அவர்கள் சேர்த்து வைத்த விலையுய ர்ந்த பொருட்கள், தங்கள் பொருட்களுக்கு போடப்பட்டிருந்த காப்புறுதி யாவும் இடம் தெரியாமல் அழிந்து போயிற்று. இப்படிப்பட்ட நிகழ்வு கள், இயற்கை அனர்த்தங்களால், கட்டம்கட்டமாக இந்த உலகின் பல இடங்களிலே நடைபெறுகின்றதை நாங்கள் கேள்விப்பட்டு வருகின்றறோம். இவை யாவும் இந்த உலகத்தின் அழிவுக்கு ஒரு முன்னனுபவம் (foretaste). இதனால் பல செல்வந்தர்கள் சர்வதேச மட்டத்திலே முதலீடு செய்து வருகின்றார்கள். அதாவது தாங்கள் வசிக்கும் தேசத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், புறதேசத்திலே தங்கள் பொருட்கள் இருக் கும் என்று எண்ணுகின்றார்கள். “வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.” என்று கர்த்தர் இயேசு கூறியிருக்கின்றார். தற்போது பூமியில் ஏற்படும் அழிவுகளையே நாங்கள் கட் டம் கட்டமாக அன்றாடம் கண்டு வருகின்றோம். பூமி மாத்திரமல்ல வான மும், அதிலுள்ள கிரகங்கள், சுடர்கள் யாவும் அழிந்து போகும் ஒரு நாள் உண்டு. இந்த பூமியிலே அதிகபடியாக சேர்த்து வைத்தவர்கள் அதிக நோவை அடைந்து கொள்வார்கள். இந்த பூமியிலே தங்களை ஞானமுள்ள முதலீட்டாளர்கள் என்று கருதிக் கொண்டவர்கள் தங்களை விட மதியீனர்கள் இல்லை என்;று அழுது புலம்பும் ஒருநாள் வருகின் றது. (மத்தேயு 24:30). இவைகள் எல்லாம் முன்னதாகவே எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்தகார இருளிலே வாழ விரும்புகின்றவர்கள், இந்த வார்த்தைகளை அசட்டை செய்கின்றார்கள். அழிந்து போகின்றவைகள் இப் பூமிக்குரியவைகள், அழியாதது தேவனுடைய வார்த்தை என்பதை நாங்கள் அறிந்திருப்பதினால் அழியாத தேவ வார்த்தையின்படி வாழக்கடவோம்.

ஜெபம்:

முடிவின் நாளையும் அந்த நாழிகையையும் அறிந்தவராயிருக்கின்ற பிதாவே, அந்த நாளிலே நாங்கள் புலம்புகின்றவர்களாக இராதபடிக்கு இந்த நாட்களிலே உம் வார்த்தையின்படி வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 21:33-36

Category Tags: