புதிய நாளுக்குள்..

தியானம் (தை 10, 2021)

மிகவும் சிறியவராகிய சகோதரர்

மத்தேயு 25:40

மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்


நியாயத்தீர்ப்பின் நாளிலே, ஆண்டவராகிய இயேசு தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். பிதாவாகிய தேவனுடைய சித்தம் செய்கின்றவர்கள் வலப்பக்கத்திலும், பிதாவாகிய தேவனுடைய சித்தம் செய்யாதவர்கள் இடப்பக்கத்திலும் பிரித்து விடப்படுவார்கள். அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுத ந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந் தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர் கள்;. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந் தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப் பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங் கள் எப்பொழுது இவைகளை உமக்குச் செய்தோம் என்று ஆச்சரியப்படுவார்கள். அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். பிரியமானவர்களே, தவறாமல் ஆலயம் செல்வதும், தினமும் வேதத்தை வாசித்து தியானிப்பதும், ஊக்கமாக ஜெபிப்பதும் கிறிஸ்தவ வாழ்க்கையில் இன்றியமையாதவைகள். ஆனால் கிறி ஸ்தவ வாழ்க்கை அத்துடன் பூரணப்படுவதில்லை. நாங்கள் கற்றவைக ளின்படி வாழ வேண்டும். தேவனுடைய ஆவியானவர் அவர்களுக்குள் வாசம் செய்வதால் அவர்கள் கிறிஸ்துவின் சாயலிலே வளர்ந்து பெருகுவார்கள். தினமும் கிறிஸ்துவைப் போல தியாகமுள்ள வாழ்க்கை வாழ்வார்கள். அவர்கள் பரம பிதாவைப் போல இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்களாக இருப்பார்கள். கைமாறு கருதாமல் நன்மை செய்வார்கள். சிறி யவர்கள் யார் என்பதை இயேசு குறிப்பிட்டிருக்கின்றார். இவைகளை அதிகதிகமாக தியானித்து கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு உங்கள து நற்கிரியைகள் வழியாக காண்பியுங்கள். கர்த்தர் தம்முடைய தயவினால் உங்களை பராமரிக்கிறாரே.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் திக்கற்றவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் அன்புகூரும்படிக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 3:18