புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 27, 2020)

ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்

சங்கீதம் 133:1

இதோ, சகோதரர் ஒருமி த்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?


யோனா என்னும் தீர்க்கதரிசி மூன்று நாள் மீனின் வயிற்றிலே இருந்தான். அங்கே இருந்து அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணி, துதியின் சத்தத்தோடே உமக்கு பலியிடுவேன் என்று கூறினார். சவுல் ராஜா தாவீதை கொன்றுபோட வகை தேடியபோது, தாவீது மலை களிலும், கெபிகளிலும் இருந்து தேவனை ஆராதித்து ஜெபம் பண்ணி னான். பவுல் என்னும் தேவ ஊழியர், சுவிசேஷத்தின் நிமித்தம் அடிக்கப்பட்டு, காயங்களுடன் சிறையிலே போடப்பட்ட போது அங்கே இருந்து தேவனை துதி த்தான். இவ்வண்ணமாக தேவனுடைய தாசர்கள் தங்களுக்கு இக்கட்டுகள் நேரி ட்டபோதும், தாங்கள் இருக்கும் இட த்தை பொருட்படுத்தாது அங்கிருந்து தேவனை ஆராதித்தார்கள். ஆனால் அவர்களுடைய சூழ்நிலைகள் வழமை க்கு திரும்பிய போது, அவர்கள் தேவ ஆலயத்திற்கு சென்று, சக விசு வாசிகளோடு சேர்ந்து தேவனை ஆராதித்தார்கள். இவ்வண்ணமாக எங் களுடைய வாழ்க்கையிலும் இக் கட்டான சூழ்நிலைகளை கடந்து வந் திருக்கின்றோம். பல நாடுகளிலே, யுத்த நாட்களிலே, பலர் குழியிலிரு ந்தும், முகாம்களிலிருந்தும் தேவனை ஆராதித்து வந்தார்கள். இந்நாட் களிலே ஏற்பட்டிருக்கும் கொள்ளை நோயின் காரணமாக, பலர் நேர லையில் தேவனை ஆராதிக்கின்றார்கள். ஏன் அப்படிச் செய்கின்றார்கள்? அது அவர்களுடைய வழக்கமான ஆராதனை முறைமையா? எந்த சூழ் நிலை ஏற்பட்டாலும் நாங்கள் தேவனை ஆராதிப்பதை விட்டுவிடப் போவ தில்லை, தேவனை துதிப்பது எங்கள் வாழ்வின் அடிப்படையா னதும் பிரதானமானதும் என எங்கள் கிரியைகள் வழியாக நாங்கள் வெளிக் காட்டுகின்றோம். ஆனால், சூழ்நிலை வழமைக்கு திரும்பும் போது, கர்த் தருடைய ஆலயத்திற்கு மகிழ்ச்சியோடு சென்று, ஒருவரை ஒருவர் வாழ்த்தி, விசாரித்து, ஒருமனதோடு தேவ னை ஆராதிப்போம். மனி தர்களுடைய வாழ்க்கையிலே வயோதிபம், உடல்நிலை, தவிர்க்கமுடி யாத சூழ்நிலைகள் காரணமாக, வீடுகளிலும், மருத்துவ மனைகளி லும், பராமரிப்பு நிலையங்களிலும், சிறைச் சாலை களிலுமிருந்து தேவனை ஆராதிக்கின்றார்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையை கர்த் தர் அறிவார். ஆனால் ஆலயம் சென்று சகோதர சகோதரிகளை தரிசி த்து, சபையாக தேவனை ஆராதிப்பதை நாங்கள் எங்கள் வழமை யா க்கிக் கொள்ள வேண்டும். சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள்.

ஜெபம்:

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று கூறும்போது மனமகிழ்ச்சியோடு சென்று, சகோதரராய் ஒருமித்து உம்மை ஆராதிக்கும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 122:1

Category Tags: