புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 10, 2020)

தேவ சமாதானத்தை காத்துக் கொள்ளுங்கள்

கொலோசெயர் 3:13

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன் னியுங்கள்.


தன் உடன் சகோதரரோடு ஏற்பட்ட துன்பமான சம்பவத்தைக் குறித்து பல மாதங்களாக ஒரு மனிதன் சிந்தித்துக் கொண்டிருந்தான். தன் நிலையை நியாயப்படுத்துவது எப்படி என்பதைக் குறித்து பல நாட்களாக சிந்தித்து ஆராய்ந்து தனக்கு சாதகமாக ஏதாவது வேத வார்த்தைகளை கூற முடியுமா என்று தேடிப்பார்த்தான். நாடகள் செல்லச் செல்ல அவன் வாழ்வை சுயநீதி மேற்கொள்வதை உணராமல் கசப்பு தன் இருதய த்திலே வளர்வதற்கு இடம் கொடுத்து வந்தான். ஆண்டு முடிவிலே தன் வாழ் வில் தேவன் தந்த சமாதானத்தை தொலைத்துவிட்டேன் என்பதை திட் டமாக உணர்ந்து கொண்டான். புதிய ஆண்டிலே, பிரவேசிக்கும் முன், தன் உடன் சகோதரனோடு எப்படியாவது நான் பேசி ஒப்புரவாகுவேன் என்று தீர்மானம் செய்து கொண்டான். தன் இருதயத்தில் இருந்த சுய கௌரவ த்தைவிட்டு இறங்குவது மிகவும் கடினமாக இருந்தது. “என் உறவினர் என்னை மானம் கெட்டவன் என்று சொல்வார்களே? என் நண்பர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பா ர்கள்? என் ஆதரவாளர்கள் என்ன நினைப்பார்கள்?” என்ற சிந்தை அவனை அதிகம் வாட்டியது. சில நாட்களாக, வெளியே சொல்ல முடி யாத பெரும் போராட்டம் மனதிலே ஓடிக் கொண்டிருந்தது. படுக்கை யிலே இருந்து கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது “ உனக்காக பாடுகள் பட்டு, உன் பாவங்களை மன்னித்து, உன்னை தன் பிள்ளையாக்கிய இயேசு உன்னைப் பற்றி என்ன நினைப்பார்” என் கின்ற வார்த்தை அவன் மனதிலே ஒலித்துக் கொண் டிருந்தது. காலை எழுந்ததும், கால தாமதம் இல்லாமல், தன் உடன் சகோதரனுடைய வீட் டிற்கு சென்றான். அவனோடு பேசி, ஒப்புரவாகினான். சொல்லமுடியாத பெரும் விடுதலை தன் மனதிலே உருவாகியதை அவன் உணர்ந்து கொண்டான். வேத வார்த்தையின் ஆலோசனையிலே இருக்கும் சந்தோஷத்தை உணர்ந்து கொண்டான். பிரியமானவர்களே, தேவ சாமா தானம் உங்களது இருதயங்களை ஆளுகை செய்ய விரும்பினால், மனக்கசப்பை உங்களை விட்டு அகற்றிவிடுங்கள். காலத்தை தாமதிக்காமல், உங்களைத் தாழ்த்தி மற்றவர்களுடன் ஒப்புரவாகுங்கள்.

ஜெபம்:

சமாதானத்தின் தேவனே, நீர் தந்த சமாதானத்தை நான் காத்துக் கொள்ளும்படிக்கு, கசப்பான வேர் முளைத்தெழும்பி கலகம் உண்டாக்காதபடிக்கு என் இருதயத்தை காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:18

Category Tags: