புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 24, 2020)

முன்குறித்த காரியம்

பிரசங்கி 3:11

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;


இஸ்ரவேல் புத்திரரில் யெப்தா என்ற ஒரு மனிதன் இருந்தான். அவனு டைய தாயானவள் ஒரு அந்நிய ஸ்திரியாயிருந்ததால், அவனுக்கு தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை. நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்திவிட்டார்கள். யெப்தா தன் சகோதரரை விட்டு ஓடிப்போய் தோப் என்னும் தேசத்திலே குடியிருந்தான். சிலநா ளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணினா ர்கள். அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத் தம்பண்ணும்போது கீலேயாத்தின் மூப் பர் யெப்தாவைத் தோப்தேசத்திலிரு ந்து அழைத்துவரப்போய், யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்ற hர்கள். அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தி னவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமய த்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான். அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள். யெப்தா அவர்க ளோடு சென்று யுத்தத்தில் வெற்றி பெற்று, இஸ்ரவேலை ஆறு வரு ~ம் நியாயம் விசாரித்தான். பிரியமானவர்களே, தேவனுடைய வழியை மனிதர்கள் மாற்றிவிட முடியாது. யெப்தாவை ஆகாதவன் என்று அவர்கள் தள்ளினார்கள் ஆனால் தேவன் முன் குறித்த நேரம் வந்த போது, அவனை துரத்திவிட்டவர்களே அவனிடத்தில் வந்து, அவனை அழைத்துச் சென்று தங்களை ஆளும் தலைவனாக மாற்றினார்கள். “சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?” பிரியமானவர்களே, சர்வ வல்லமையுள்ள தேவன் உங்கள் வாழ்க்கையை குறித்து முன்குறித்த நன்மையான ஈவுகளை ஒருவரும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் நீங்கள் மனந்தளராமல் பொறுமையோடு தேவனுடைய நேரத்திற்காக காத்திருங்கள். தேவனுடைய சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேற இடங் கொடுங்கள். தேவன் அதை நிறைவேற்றி முடிப்பார்.

ஜெபம்:

கைவிடாத தேவனே, நீர் என்னை குறித்து முன்குறித்திருக்கும் திட்டம் என்னில் நிறைவேறும்படிக்கு உம்முடைய நேரத்திற்காக பொறு மையோடு காத்திருக்கும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 14:27