புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 16, 2020)

நித்திய வாழ்வு கொடுக்கும் போஜனம்

யோவான் 6:27

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்;


வீட்டிலிருந்தாலும், வேலை செய்யும் இடத்திலிருந்தாலும், கல்வி நிலையங்களிலிருந்தாலும், வெளியிடங்களிலிருந்தாலும், தூர தேசத் திற்கு பயணப்பட்டிருந்தாலும் அந்தந்த வேளைக்குரிய ஆகாரத்தை உண்பதற்கு மனிதர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறார்களுக்கும், குழந்தைகளுக்கும் பல பராக்குகளை காட்டி அவர்கள் தங்கள் ஆகாரத்தை உண் ணும்படி ஊக்குவிக்கின்றோம். வயோ திபத்தினால் சரீர பெலன் குறைந்திரு ப்பவர்களுக்கு ஆகாரம் உட்கொள்ள உதவி செய்கின்றோம். கருப்பொருளா வது மனிதன் தன் நாளாந்த ஆகார த்தை உட்கொள்வதற்கு மறந்து போவ தில்லை. அந்த ஆகாரத்தை நேரத்தி ற்கு உட்கொள்ளுவதற்காக சிறு வய திலிருந்தே அதிக பிராயசப் படுகி ன்றான். அவை எங்களுக்குத் தேவை யானது என்று பரம பிதா அறிந்திருக்கின்றார். எனவே அழிந்துபோ கிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; என்று இயேசு கூறியிரு க்கின்றார். நாங்கள் வீட்டிலிருந்தாலும், வேலை செய்யும் இடத்திலிரு ந்தாலும், கல்வி நிலையங்களிலிருந்தாலும், வெளியிடங்களிலிருந்தா லும், தூர தேசத்திற்கு பயணப்பட்டிருந்தாலும் நித்திய ஜீவனுக்குரிய ஆன்மீக உணவாகிய தேவனுடைய வார்த்தையையும் அவரோடுள்ள உறவையும் நிறுத்திவிடக் கூடாது. “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்பு வித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு. அவரே காரியத்தை வாய்க்கப்ப ண்ணுவார்.” என்று அன்று காலையில் கற்ற வசனம் நாங்கள் எங்கு சென் றாலும் எங்கள் சிந்தையில் நிலைத்திருக்க வேண்டும். அந்த நாளிலே பொல்லாதவர்களும் துன்மார்க்கரும் நியாக்கேடு செய்தால், பொறா மை கொள்ளாதபடி, பதிலடி கொடுக்காமல், எங்கள் மனதின் யோச னையை கர்த்தருக்கு ஒப்புவித்து பொறுமையாக இருக்க வேண்டும். தேவனுடைய வசனம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. அதன் படி நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய் க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய். எனவே எங்கு சென்றாலும் ஆன்மீக ஆகாரத்தையும் ஜெயங்கொடு க்கும் தேவனோடு உறவாடுவதையும் (ஜெபம்) விட்டுவிடாதிருங்கள்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, நித்திய ஜீவனை கொடுக்கும் உம் முடைய ஜீவ வார்த்தைகளை தினமும் படித்து அவைகளை என் வாழ் வில் கைக்கொள்ளும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:1-5