புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 04, 2020)

துதியினால் உண்டாகும் விடுதலை

அப்போஸ்தலர் 16:25

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்.


தேவ ஊழியராகிய பவுல், பிலிப்பு என்னும் பட்டணத்திலே இருந்த நாட்களிலே, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எதிர்ப்பட்டாள்;. பவுல் தாமே, இயேசுவின் நாமத்தினாலே, குறிசொல்ல ஏவுகிற அசுத்த ஆவியை அந்தப் பெண்ணிடமிருந்து அகற்றி, அந்தப் பெண்ணுக்கு விடுதலை யைக் கொடுத்தார். அவள் அந்த பொல்லாத ஆவியிலிருந்து விடுத லையடைந்தாள் என்று சந்தோ~ப்படு வதற்குப் பதிலாக, அவளுடைய எஜமா ன்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலை யும் சீலாவையும் பிடித்து, அவர்கள் வஸ்திரங்களை கிழித்து, அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வை த்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கு ம்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்ட ளையிட்டார்கள். சிறைச்சாலைக்காரன், அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். நற்செய்தியை அறிவித்து, நன்மையை நடப்பிக்கின்ற இவர்களுக்கு இப்படிப்பட்ட பரிதாபமான நிலைமை உண்டாயிற்று. வெளியே இரு ந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு அவல நிலையாக இருந்தாலும், அவர்களின் இருதயத்திலே தேவ சமாதானம் இருந்தது. தேவனைக் குறித்த அன்பும் வாஞ்சையும் பற்றி எரிந்து கொண்டேயிருந்தது. நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித் துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச் சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந் தது. உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது. எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. அந்த இராத்திரியிலே சிறைச்சாலைக் காரனுடைய குடும்பத்தில் பெரிதான அற்புதம் நடைபெற்றது. தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிட த்தில் விசுவாசமுள்ளவனாகி மனம கிழ்ச்சியாயிருந்தான். பிரியமானவ ர்களே, ஊழியத்தின் பாதையிலே வரும் சவால்களைக் கண்டு சோர் ந்து போய்விடாதிருங்கள். உபத்திரவங்கள் மத்தியிலும் தேவனைத் துதியுங்கள். தேவன் பெரிதான விடுதலையை உண்டு பண்ணுவார். உங்கள் துதியினால் உங்களைச் சூழ இருப்பவர்களின் வாழ்விலே விசுவாசமும், குடும்பங்களிலே மனமகிழ்ச்சியும் உண்டாகும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்கள் வாழ்வின் சூழ்நிலைகளைக் கண்டு மருண்டு போகாமல், எப்போதும் உம்மைத் துதித்து ஆராதிக்கும் மேன்மையை உணர்ந்து வாழ கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 18:1-6