புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 22, 2019)

நன்றியுள்ளவர்களாக இருங்கள்

சங்கீதம் 22:22

உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதிப்பேன்.


“என்னம்மா அயலில் வசிக்கும் அந்த மனிதன் மாடி வீட்டிலே இருக் கின்றான், ஆளுக்கொரு மோட்டார் வண்டிகளை வைத்திருக்கின் றார்கள், நல்ல வசதியாக வாழ்கின்றார்கள், ஆனால் எங்கள் வீட்டில் அடிப்படைத் தேவை சந்திக்கப்பட்டதை குறித்து நீங்கள் சாட்சி கூறு கின்றீர்களே” என்று தன் அறிவுக்கு எட்டியபடி இளைய மகன் கூறிக் கொண்டான். தாயார் அந்த மகனை அழைத்து: நீ உண்ணும் உணவுகளை வேண்டுவதற்கு யார் பணம் கொடு க்கின்றார்? மறுமொழியாக அவன் “அப்பா” என்று கூறினான். உனக்கு பாடப்புத்தகங்கள், உடுத்தும் ஆடை கள், அணியும் சப்பாத்துக்கள், நீ உற ங்கும் உன்னுடைய பாய் போன்றவ ற்றை யார் வாங்கிக் கொடுத்தார்கள் என்று தாயார் கேட்டதற்கு, “அப்பா தான்” என்று மகன் பதில் கூறி னான். அந்த அப்பாவை நீ நேசிக்கின்றாயா? ஆம் அம்மா, எனக்கு என் அப்பாவிலே நல்ல நேசம் இருக்கிறது என்றான். அப்படியென் றால், அவருக்கு எப்போதாவது நன்றி சொல்லுகின்றாயா என்று கேட் டாள். இல்லை அம்மா, ஒரு நாளும் அப்படி நினைத்ததுமில்லை கூறி யதுமில்லை, ஆனால் இனி நிச்சயமாகக் கூறுவேன் என்றான். நல்லது, அந்த அப்பாவை எங்களுக்கு கொடுத்த எங்கள் பரம தந்தைக்கு நாங்கள் எவ்வளவு நன்றியாக இருக்க வேண்டும் என்று தாயார் கூறினாள். “உங்களைப் போல அன்புள்ள அம்மாவை தந்தததிற்கு நான் என் தேவனுக்கு நன்றி கூறுவேன்” என்று அந்த சின்னப்பையன் பதிலளித்தான். ஆம் பிரியமானவர்களே, தங்கள் வாழ்க்கையில் நன்மை எங்கே இருந்து வந்தது என்று தெரியாமல் வாழும் அயலவர் களைக் குறித்து அலட்டிக் கொள்ளாமல், தேவன் எங்கள் வாழ்க் கையில் செய்த உபகாரங்களை நாங்கள் மற்றவர்கள் மத்தியிலே சாட் சியாகக் கூறவேண்டும். அவை சிறிய காரியங்களாக இருக்கலாம் அல் லது பெரிய காரியங்களாக இருக்கலாம், மனதாரக் கூறப்படும் நற் சாட்சியில் தேவன் பிரியப்படுகின்றார். ஒரு வேளை அதை கேட்கும் சிலருக்கு இவை அற்பமாக இருக்கலாம், ஆனால் ஏக்கத்தோடு இரு க்கும் வேறு சிலரை எங்கள் சாட்சிகள் பக்திவிருத்தியடையச் செய் யும். எனவே, உண்மை மனதோடு, எங்களைத் தாழ்த்தி, சபை நடு விலே எங்கள் சாட்சிகள் வழியாக தேவனைப் போற்றுவோம்.

ஜெபம்:

அன்பின் பரம தந்தையே, ஒவ்வொரு நாளும் நீர் எனக்கு காட்டும் அன்பை, ஆதரவை நான் உண்மை மனதுடன் மற்றவர்கள் மத்தியிலே பகிர்ந்து கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:1-2