புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 17, 2019)

நித்திய ஆறுதல் உண்டு

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.


உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக என்று வேதத்திலே வாசிக்கின்றோம். மேலும் கர்த்தராகிய இயேசு கூறுகையில், நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என்னிட த்தில் கற்றுக்கொள்ளுங்கள் என்றார். இப்படிப்பட்ட தெய்வீக குணா திசயங்களில் நாங்கள் வளர வேண்டும். இந்த நறுமணம் எல்லா மனி தர்கள் மேலும் வீச வேண்டும் என்று நேற்றய நாளிலே தியானித் தோம். வேட்டைக்கு கொண்டு செல் லும் நாய்கள், எந்த ஒரு உயிரின த்தை கண்டாலும், அதை வேட்டை யாட வேண்டும் என்ற நோக்கத்தையே கொண்டிருப்பது போல, நாங்கள் யாரைக் கண்டாலும், கடித்து குதறி விட வேண்டும் என்ற எண்ணம் சற் றும் இருக்கக் கூடாது. சில மனிதர்க ளின் வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன் றாக பல ஏமாற்றங்களுக்;கு முகங் கொடு ப்பதால், மற்றய மனிதர்கள் யாவர் மேலும் ஒரு கசப்பு ஏற்பட்டு விடுகின்றது. எனவே இன்னுமொரு ஏமாற்றத்தை சந்திக்க பெலனில்லாததால், தங்களை காத்துக் கொள் ளும் உபாயமாக, தங்கள் பக்கமாக வரும் யாவரையும் வார்த்தை களாலே விரட்டி விடுகின்றார்கள். ஏமாற்றங்கள், மன வேதனையை உண்டு பண்ணுவது ஒரு கசப்பான உண்மை. ஆனால், நாங்கள் ஒருவரும் அதை ஏற்றுக் கொண்டு அடிமைகளாக வாழத் தேவையி ல்லை. எங்கள் சொந்த பெலத்தினாலோ அறிவினாலோ மனப்பாரங்க ளையும் வேதனைகளையும் மேற்கொள்ள முடியாது. கவலைப்படா திருங்கள்! மனித குலம் பாவ இருளில் இருந்து விடுதலையடைய வேண்டும் என்று தன்னையே எமக்காக பலியாக கொடுத்த அருள் நாதர் இயேசு அழைக்கின்றார். உங்கள் மனப்புண்கள் நீங்கள் நேசித்த வர்களாலும், உயிருக்கு உயிராக நம்பினவர்களாலும் உண்டாயிருக்க லாம். எவை எப்படியாக இருந்தாலும், வறண்ட வனாந்தர வழிகளை வயல் நிலம் போல மாற்றும் இயேசு உங்கள் வாழ்க்கையை மாற்றிப் போடுவார். மனப்புண்களை ஆற்றி, நீங்கள் தேடும் நிம்மதியை இன்றே உங்களுக்கு அவர் தருவார். எனவே, உங்கள் மனதிலுள்ளவைகளை ஜெப த்தின் வழியாக இன்றே இயேசுவுக்கு தெரியப் படுத்துங்கள்.

ஜெபம்:

விடுதலை தரும் தேவனே, பாரங்களை தாங்க முடியாமல் சோர்ந்து போயிருக்கும் என் நிலையை அறிந்தவரே, நான் போக வேண்டிய வழியை எனக்கு கற்றுத் தந்து என்னை வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 1:3-4