புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 09, 2019)

சலிப்படையாத நற்கிரியைகள்

மத்தேயு 5:14

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.


ஒரு ஊரிலே பல வருடங்களாக வாழ்ந்து வந்த மனிதன், எப்போதும் தான் கடந்து செல்லும் பாதையில் காணப்படும் குப்பை கூளங்கள், மற் றும் கண்ணாடித் துண்டுகள், கம்பிகள் யாவற்றையும், நடைபாதையை விட்டு அகற்றிவிடுவது வழக்கம். அந்த ஊரிலே வாழ்ந்த குறும்புத்தன முடைய இளைஞர்கள் இவர் அவ்வழியாய் வருமுன்னே, கண்ணாடித் துண்டுகள், மற்றும் முள்தடிகளை போட் டுவிடுவார்கள். ஆனால் அந்த மனிதர் தன் வயதான நாட்களிலும் சலிக்காமல் தான் செல்லும் பாதையிலுள்ள எல்லா வற்றையும் சுத்தப்படுத்தி வந்தார். ஒரு நாள் மதிய வேளையிலே, அவ்வழி யாக ஒர் தாயாரும் அவளுடைய சிறிய மகனும் நடந்து சென்றபோது, அந்த வழி யில் கிடந்த ஒரு கண்ணாடித் துண்டு அந்த தாயாரின் காலில் குத்திவிட்டது. அதைக் கண்ட அந்த சிறு பையன், “அந்த வயதான தாத்தா இன்று இந்த வழியால் இன்னும் போகவில்லை போல” என்று சொல்லிக் கொண் டான். ஆம் உண்மையிலே அந்த வயதானவர் சுகவீனமுற்றிருந்த தால் சில நாட்களாக வெளியே செல்லமுடியாதிருந்தார். சற்று சிந்தித் துப் பாருங்கள்! அந்த வயதானவர் யார் முன்னிலையிலும் எந்த, பேச்சுக்களைiயோ, பிரசங்கங்களையோ செய்யவில்லை. பல வருடங் களாக, சலிப் பில்லாமல், நாளாந்தம் தான் செய்து வந்த நற்கிரி யைகளால், அந்த ஊரில் உள்ள சிறுவர்கள் மத்தியில் கூட தன் நற் பண்புகளை வெளிக் காட்டியவராக இருந்தார். தேவனுக்கென்று வேறு பிரிக்கப்பட்ட நாங்கள். அவருக்குள்ளாக மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்ட நாங்கள், இந்த வார்த்தைகளை சொல்லி எங்களையே நாங்கள் மேன்மை பாராட்டாமல், சலிப்படையாத எங்கள் நற்கிரியைகளின் வழி யாக நாங்கள் இந்த உலகத்திற்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். சொல்லுவது சுலபம் செய்வது கடினம் என்பதை நாங்கள் யாவரும் அறிவோம். ஆனால், எங்களை பெலப்படுத்துகின்ற கிறிஸ்து இயேசு வால் நற்கிரியைகளை செய்யும் ஆற்றலை நாங்கள் பெற்றுக் கொள் கின்றோம். உங்கள் வாழ்க்கையின் உயர்விலும் தாழ்விலும், எவ்வே ளையும், மனு~ர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத் திலிரு க்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவ ர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

ஜெபம்:

நன்மையின் ஊற்றாகிய தேவனே, சோர்ந்து போகாமல், இயேசுவின் நாமத்திலே நற்கிரியைகளை நடப்பித்து முடிக்கத்தக்கதான ஆற்றலைத் தினமும் எனக்குத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 2:7