புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 31, 2019)

தேவன் பட்சபாதம் இல்லாதவர்

ரோமர் 2:11

தேவனிடத்தில் பட்சபாதமில்லை.


தெருவிலே பல ரகமான வாகனங்களை காண்கின்றோம். அவற்றுள் சில மிகவும் விலையுயர்ந்ததாகவும் சில விலை குறைந்ததாகவும் காணப் படலாம் ஆனால் அவைகள் யாவும் ஒரே தெரு வழியாகவே ஓட் டப்படுகின்றது. அவைகள் யாவற்றிற்கும் ஒரே விதமான நெடுஞ்சாலை விதிகளும் சமிக்ஞைகளும் போடப்பட்டிருக்கின்றது. உலகிலே வாழும் ஜனங்களில் சிலர் மாளிகைகளிலும் சிலர் சாதாரண குடியிருப்புக்களிலும் வாழ்ந்து வரலாம், வாழ்க்கையின் தரங் கள் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் யாவருக்கும் ஒரே விதமாகவே சம்ப விக்கின்றது. எப்படியெனில் உயர்ந்தவ ர்களும், தாழ்ந்தவர்களும், செல்வந்தரும், ஏழைகளும், ஞானிகளும், மூடரும், துன்மார்க்கர்களும், சன்மார்க்கர்களும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்கள் யாவரும் ஒருநாள் இந்த பூமியிலே பிறந் தார்கள், சில ஆண்டுகள் வாழ்கின்றார்கள், ஒருநாள் இந்த உலக த்தை விட்டு யாவரும் கடந்து செல்ல வேண்டும். இவை யாவும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியதிகள். அதிலே எந்த மாறுபாடும் இல்லை. இந்த உலகிலே சிலர் சரித்திரம் படைக்கலாம். காலாகாலம் தங்கள் பெயர் இந்த பூமியில் விளங்கும்படி உலக சாதானைகளை செய்யலாம் ஆனால் விண்ணும் மண்ணும் அதிலுள்ளவைகள் யாவும் ஒரு நாள் ஒழிந்து போகும். அந்நாளிலே எல்லா பெயரும் புகழும் ஒழிந்து போகும். ஒரு வேளை இந்த உலகத்தின் அளவுகோல் தராத ரத்தின் அடிப்படையில் வகுக்கப்படலாம் ஆனால் தேவன் உலகத்தின் பாகு பாடுகளின்படி மனிதர்களை கண்ணோக்குகின்றவர் அல்லர். தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமை யையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தி யஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்ப டியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிர கோபாக்கினை வரும். பிரியமானவர்களே, இந்த உலக கணிப்பின்படி உங்களுடைய வாழ்வை நீங்கள் நிச்சயிக்காதிருங்கள். நீங்கள் தேவ னுக்கு பயந்து அவர் கற்பனைகளின் வழியில் வாழும் போது, இந்த உலகம் எப்படியாக உங்களை கணிப்பிட்டாலும் அதனால் சோர்ந்து போய்விடாதிருங்கள். தேவன் உங்களை நம்பி தந்த பொறுப்பு, அது பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் அதை நிறைவேற்று ங்கள். அவர் வெளிப்படும் நாளிலே பெரிதான பலன் உண்டு.

ஜெபம்:

நீதியின் தேவனே, இந்த உலகத்தின் அங்கீகாரத்தை பெறும்படியாய் நான் வாழாமல், உம்முடைய வழியில் பயபக்தியோடு வாழும்படிக்கு எனக்குக் கற்றுத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:25