புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 03, 2019)

கர்த்தராலேயே காரியம் வாய்க்கும்

நீதிமொழிகள் 16:3

உன் செய்கைகளைக் கர் த்தருக்கு ஒப்புவி; அப் பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.


ஒரு முறை, “இயேசு கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திர ளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங் கினார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு அந்தப்படவுகளில் ஒன் றில் ஏறினார், அது சீமோனுடையதாயி ருந்தது. அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொ ண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜன ங்களுக்குப் போதகம்பண்ணினார். அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளி க்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங் கள் வலைகளைப் போடுங்கள் என் றார். அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட் டும் ஒன்றும் அகப்படவில்லை. ஆகிலும் உம்முடைய வார்த்தையின்ப டியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்க ளைப் பிடித்தார்கள். அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர் கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.” அதிகமாய் பிரயாசப்பட்டும், பிரயாசத்தின் பலனை காணாதவிடத்து, மனிதர்கள் இளைத்துப் போய்விடுகின்றார்கள். சில வேளைகளிலே, தேவன் இருக்கின்றார் என்பதை நாங்கள் மறந்து போய்விடுகின்றோம். படிக்கின்றோம், உழைக்கின்றோம், உண்கின்றோம், உறங்குகின்றோம், எழுகின்றோம் என்ற வட்டத்தில் உலகம் தன் பாட்டிற்கு போய் கொண் டிருக்கின்றது என்பது போல, தேவனுடைய பிள்ளைகளும், வாழ்ந்து விடுவோம் என்று எண்ணுகின்றார்கள். ஆனால், அன்புள்ள தேவனோ, தம்முடைய பிள்ளைகளுக்கு, தாம் யார் என்பதையும், காரியங்கள் எப்படியாக நடக்கின்றது என்பதையும், இந்த உலக வாழ்விலே எங் கள் கருப்பொருள் என்ன என்பதையும், எங்கள் வாழ்க்கையின் நிகழ் வுகள் வழியாக தம்மை வெளிப்படுத்தி, தமக்குள் எங்களை ஸ்திரப்படு த்தியும் வருகின்றார். எப்படியும் வாழலாம் என்று இந்த உலக போக்கி ன்படி செல்லாமல், எங்கள் செய்கைகளை தேவனுக்கு ஒப்புக் கொடு த்து வாழ வேண்டும். அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுகின்றவர்.

ஜெபம்:

சகலத்தையும் ஆளும் தேவனே, உம்மாலேயே காரியம் ஆகும், நீரின்றி அன்பு வாழ்வு இல்லை என்பதை நான் உணர்ந்து, உம் வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 5:1-11