புதிய நாளுக்குள்..

தியானம் (தை 03, 2019)

இளைப்பாறுதல் தருகின்றவர்...

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சு மக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்க ளுக்கு இளைப்பாறுதல் தருவேன்.


இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, தம்மிடத்தில் விடுதலையடையும்படியாய் வந்த யாவரையும் குணமாக்கி அவர்கள் வாழ்வில் ஒரு விடியலை உண்டு பண்ணினார். சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் போன்றவர்களை மாத்திரமல்ல, வாழ்க்கையில் சிறு மைப்பட்டு ஒடுக்கப்பட்டு மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கொடுத்தார். வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லோ ரும் என்னண்டை வாருங்கள், நான் உங் களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என் னும் ஜீவ வார்த்தை அன்று மட்டும ல்ல, இன்றும் மாறாததாக இருக்கின் றது. இன்றும் நாங்கள் இயேசு அண் டைக்கு வரும் போது, அவர்தாமே, இந்த உலகம் தரமுடியாத சமாதான த்தை உள்ளத்திலே கொடுத்து, மன ஆறுதலை தருகின்றவராய் இருக்கின் றார். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணு வேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” என்ற வசன த்தின்படி, பிதாவாகிய தேவனின் வலது பாரிசத்திலே இருந்து எங்க ளுக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கும் இயேசு எங்கள் உள்ளத்தில் வாசம் செய்ய விரும்புகின்றார். அவர் வாசம் செய்யும் உள்ளத்தில் குழப்பங்களுக்கு இடமில்லை. எனவே, அவர் உங்கள் உள்ளத்தில் வாசம் செய்யும்படி அவருக்கு இடங்கொடுங்கள். அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். அவருடைய வார்த்தைகளை வாசித்து, இருத யத்திலே பதியவைத்து, தியானித்து கைகொண்டு வருகின்றவர்கள், அவருக்கு இடங்கொடுக்கின்றார்கள். அவரோடு தினமும் ஜெபத்திலே இடைப்படுகின்றவர்கள், அவர் தங்கள் உள்ளத்திலே வாசம் செய்கி ன்றார் என்பதை உணர்ந்து கொள்ளுகின்றார்கள். பிரியமானவர்களே, தேவனுடைய ஜீவவார்த்தைகளை தினமும் வாசியுங்கள், தியானியு ங்கள், கைக்கொள்ளுங்கள். நாள்தோறும் ஜெபத்திலே அவருடன் இடைப்படுங்கள், அதன் வழியாக இயேசு அண்டை சேருங்கள், அவர் உங்களுக்கு இளைப்பாறுதலை தருவார்.

ஜெபம்:

ஆறுதலின் தேவனே, உம்மிடத்திலிருக்கும் இளைப்பாறுதலின் மேன்மையை நான் உணர்ந்து கொள்ளவும், உம்மண்டை கிட்டிச் சேரவும் எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளிப்படுத்தல் 3:20