புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 25, 2018)

உண்மையுள்ளவர்கள்

சங்கீதம் 15:4

ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.


தேவனாகிய கர்த்தர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? என்ற வார்த்தையை நாங்கள் அறிந்திருக்கின்றோம். பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல. நான் உங்களுக்கு ஒரு மீட்பரை அனுப்புவேன் என்று வாக்குக் கொடுத்தவர், அதை நிறைவேற்றினார். மீட்பராகிய இயேசு கிறிஸ்து எவ்வளவாய் அவமானத் தையும், நிந்தையையும், பாடுகளையும், மனித குலத்தின் பாவத்தின் அகோரத்தையும் சுமக்கும்படி, மரணம்மட்டும் தன்னை சிலுவையில் தாழ்த்த வேண் டும் என்று அறிந்து, அவர் தன் வாக்கை நிறைவேற்றி முடித்தார். அதே போல நாங்களும் எங்கள் வாக் கில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். புதிய ஏற்பாட்டின் கிருபையின் காலத்தில் வாழும் நாங்கள் அதிக பாக்கியவான்களும் பாக்கியவதிகளுமாயிருக்கின்றோம். தேவனுக்கும் மனிதர்களுக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் ஆணையி டுகின்றவர்கள் அல்ல. ஆனால் ஒரு காரியத்தை குறித்து ஆம் என்றால் ஆம் என்றும், இல்லை என்றால் இல்லை என்றும் இருக்க வேண்டும். சிலர் தேவன் முன்னிலையில் பொருத்தனைகள் செய்து, பின்பு தங்கள் பங்கை நிறைவேற்றாமல் இருக்கின்றார்கள். இன்னும் சிலர், இந்தக் காரியத்தை நான் செய்து தருவேன் என்று ஒருவருக்கு வாக்கு கொடுத்த பின், அதினால் தனக்கு பொருளாதார நஷ்டம்  ஏற்படப் போகின்றது அல்லது சில இடையூறுகள் வர சாத்தியம் உண்டு என்று அறிந்த மாத்திரத்தில், தங்கள் வாக்கை நிறைவேற்றாது போய்விடுகின்றார்கள். கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாம லிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி என்று நீதிமொழிகளிலே வாசிக்கின்றோம். நாங்களோ, குறுகிய கால இலாபத்திற்காக எங்கள் ஒப்பந்தங்களிலிருந்து பின்வாங்கக் கூடாது. உத்தம மார்க்கத்தார் பாவத்திற்கு ஒருபோதும் உடன்பட மாட்டார்கள். நாங்கள் ஞானமுள்ளவர்களாய் நடந்து, ஒப்பந்தங்களுக்கு வாக்கு கொடுக்க முன்பு, அதை குறித்து சிந்திப்பது, ஜெபிப்பது, வேத வாக்கியங்களோடு ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியமானது. 

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே,  நீர் என்றென்றும் வாக்குமாறாதவ ராகவே இருக்கின்றீர் அதுபோல நாங்களும் உமக்கும் மனிதர்களுக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்க பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எண் 23:19