புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 16, 2018)

ஜெயமோ கர்த்தரால் வரும்!

நீதிமொழிகள் 21:31

குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.


நாங்கள் காண்பவைகளும், காணாதவைகளும் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்றது. பல யுத்த ங்களை நடத்திய சக்கரவர்த்திகளை சரித்திரத்திலே காண்கின்றோம். அவர்கள் தங்கள் படைப்பலத்தினால் உலகை ஜெயம் கொள் கின்றோம் என்று எண்ணியிருந்தார்கள். சிலர் சர்வ வல்லமையுள்ள தேவனை பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர்கள் தேவனுடைய ஆளு கைக்கு கட்டுப்பட்டிருக்கின்றார்கள் என் பதையும், சர்வவல்லவர் அனுமதியி ல்லாமல் ஒன்றும் நடைபெறாது என்ற  ஞானத்தை அறியாத மதிகேடராக வாழ்ந்து மறைந்து போனார்கள்.  ஒரு ராஜ்யம் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு அவர்களுக்கு படைப்பலம் தேவை என்று அதைப் பெருபித்துக் கொள்கின்றார்கள். ஆனால் பர லோகத்திலிருக்கின்ற பராக்கிரமம் நிறைந்த தேவனிடமிருந்தே ஜெயம் வரும். மனிதர்கள் யுத்தங்களில் ஜெயம் கொள்ள அவர்களுக்கு தேவனுடைய அனுக்கிரகம் தேவை, ஆனால் யுத்தத்தின் முடிவை மாற்ற தேவனுக்கு எதுவும் தேவையில்லை. மனிதர்களுக்கு ஆதரவாக தேவன் தாமே மருத்துவர்களை ஏற்படுத்தியிருக்கின்றார். அதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். ஆனால் யார் எந்த முயற்சிகளை எடுத் தாலும் சுகத்தைக் கட்டளையிடுபவர் தேவன். ஒரு மனிதனுக்கு சுகம் கொடுப்பதற்கு தேவனுக்கு எதுவும் தேவை இல்லை. அவர் தம்மு டைய வார்த்தையை அனுப்பி அவர் நினைத்த காரியத்தை நடத்தி முடிக்கின்றார். அதை எவரும் தடுக்கமுடியாது. அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்! படிக்கும் பாடங்களில் விசேட சித்தி பெற வேண்டும் அல்லது நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நீங்கள் கடும் முயற்சிகள் எடுக்கலாம், அதை ஒருவன் பெற்றுக் கொண்டால், அது தேவனுடைய அனுக்கிரகம். தேவனுடைய ஆளுகையின் இரகசியத்தை இன்றும் பலர் நகைக்கின்றார்கள். நாங்கள் எங்கள் சொந்த முயற்சிகளில் வாழ்கின்றோம் என்று தேவனுடைய மகத்துவங்களை அறியாதவர்களாக தங்கள் வாழ்நா ட்களை வீணாக்குகின்றார்கள். இப்படி எண்ணுகின்றவர்களுடைய நாட்களும் எண்ணப்பட்டிருக்கின்றது. 

ஜெபம்:

பராக்கிரமமுள்ள தேவனே,  நீர் சர்வ வல்லவர், எல்லாம் உம்முடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டிருக்கின்றது என்ற உண்மையை அறிந்து வாழும்படிக்கு, ஞானமுள்ள இருதயத்தைக் எனக்குத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோசெயர் 1:16