புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 31, 2018)

எச்சரிக்கையுள்ளவர்களாயிருங்கள்

நீதிமொழிகள் 20:19

தூற்றிக்கொண்டு திரிகிற வன்   இரகசியங்களை வெளிப்படுத்துவான்;; ஆதலால்   தன்  உதடுகளினால்    அலப்புகிறவனோடே   கலவாதே 


தேவனை இன்னும் அறிய வேண்டிய பிரகாரம் அறியாதவர்கள், சகோ தரர்களுக்கிடையில் பிரிவினைகளை உண்டு பண்ணும் பொருட்டு கசப்பான வேர்களை முளைக்கப்பண்ணிவிடுகின்றார்கள். ஒரு வீட் டிலே நுழையும் போது, அந்த வீட்டாருக்கு என்ன காரியத்தில் நாட்ட முள்ளவர்கள் என அறிந்து கொள்வார்கள், அல்லது இவர்களுக்கு எந்த நபரை பிடிக்கும் என அறிந்து, அவர்களைப் பற்றி மனம் குளிரும்படி யாக பேசி, அந்த வீட்டில் இருக்கும் நற்பண்புகளை இன்னும் அதிகம் மிகைப்படுத்திப் பேசி, தங்கள் தொட ர்பை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். தங்கள் துர்க்குணத்தை வெளிப்படுத்த இவர்கள் போடும் அத்திவாரம் இதுவே. அதன் பின்பு, அங்குமிங்குமாக கேள் விப்பட்ட விடயங்களையும், தங்கள் சிந்தையில் ஊகித்த விடயங்களையும் கூறி பிரிவினையின் வித்துக்களை மனதில் விதைத்து விடுவார்கள். பிரியமானவர்களே, இப்படிப்பட்டவர்களை குறித்து எச்சரிக்கை யாயிருங்கள். புதியவர்களும், பெலனற்றவர்களும் அறியாமையிலே இப்படி செய்யும் போது, அவர்களுக்கு புத்தி சொல்லி, அவர்களுக்கு தேவ நியமங்களை போதிக்க முடியுமென்றால் அப்படிச் செய்யுங்கள். ஆனால் கோள் சொல்வதையும், தூற்றித் திரிவதையும், முகஸ்துதி செய்வதையும் தங்கள் தொழிலாக கொண்டவர்களை விட்டு விலகு ங்கள். மற்றவர்களின் விவகாரங்களை பற்றி உங்களிடம் குறை கூறுப வர்கள், நிச்சயமாக உங்கள் விவகாரங்களைப் பற்றியும் மற்றவர் களுக்கு குறை கூறி பிரிவினைகளை உண்டுபண்ணும்  நாட்கள் சீக்கிரத்தில் வரும். அதே வேளையில், இன்று உங்களை ஆராய்ந்து பாருங்கள். இப்படியான பிரிவினையின் செயல்கள்  உங்கள் உள்ளத்தில் இருக்குமாயின் அவைகளை இன்றே விட்டுவிடுங்கள். பக்திவிருத்திக்கேதுவானவைகளைப் பேசுங்கள்

ஜெபம்:

அன்புள்ள பரலோக தகப்பனே, சகோதரர்களுக்குள்ளே பிரிவினை களை உண்டுபண்ணும் எந்த சம்பாஷணைகளையும் நான் ஊக்குவிக் காதபடி எச்சரிக்கையாய் இருக்கும்படி எனக்கு உணர்வுள்ள இருதய த்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:11