புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 30, 2020)

கற்றவைகளை கைக்கொள்ளுங்கள்

யாக்கோபு 1:22

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதப டிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத் திரமல்ல, அதின்படி செய் கிறவர்களாயும் இருங் கள்.


பாடசாலைக்கு சென்று வருகின்றேன் என்றொரு திருப்தி ஒரு மாணவ னின் மனதிலிருந்தது. ஆனால் அவன் வீடு திரும்பியதும், பாடசாலை யில் கற்ற எந்த பாடங்களையும் மீள்ஆய்வு செய்வதையோ, அதை குறித்த எந்த கரிசனையோ இல்லாதிருப்பதை அவனுடைய பெற்றோர் கவனித்தார்கள். மாணவனுடைய தந்தையார் அவனை நோக்கி: மகனே, நீ உற்சாகமாக பாடசாலைக்கு சென்று வருவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகி ன்றேன். ஆனால், நீ பரீட்சையில் சித்தி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண் டுமாயின் கற்ற பாடங்களை மறுபடியும் வீட்டில் கற்றுக் கொள்ள வேண்டும், அந்த பாடங்களின்படி உன் அறிவு பெருக வேண்டும். அந்த அறிவு, உன் நாளாந்த விவகாரங்களில் பயிற்சி செய்யப்பட வேண்டும் என்று புத்திமதி கூறினார். சற்று இந்த சம்பவத்தை எங்கள் ஆவிக்குரிய வாழ் க்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பொதுவாக, ஆலயத்திற்கு சென்று வருவ தையிட்டு மனிதர்கள் திருப்தியடைவதுண்டு. அவர்களை பார்க்கும் மற்றய மனிதர்களும், “இந்த மனிதன் பக்தியுள்ளவன்” என்று கூறிக் கொள்வார்கள். பிரியமானவர்களே, தவறாமல் ஆராதனையில் பங்கு பெறுவது நல்லது. அதை செய்து வந்தால் விட்டுவிடாதிருங்கள். அதை நீங்கள் செய்யத் தவறினால், தவறாமல் ஆராதனையில் கலந்து கொள்ளும்படி உங்கள் வாழ்க்கையை மாற்றியமையுங்கள். அத்தோடு நின்றுவிடாமல், வீடு திரும்பியதும், ஆலயத்திலே போதிக்கப்படும் தேவ வார்த்தைகளை மறுபடியும் கேளுங்கள் அல்லது நீங்கள் எழுதிய குறிப்புக்களை திரும்பவும் தியானியுங்கள். அதன்படி நாளுக்கு நாள், உங்கள் சுபாவங்கள் தேவனுக்கேற்றதாக மாறும்படிக்கு, தேவ வார்த் தைகள் உங்களில் கிரியைகளை நடப்பிக்க இடங் கொடுங்கள். பாட சாலையிலே சுகாதரத்தை பற்றி படிதத மாணவன், தன் வாழ்க்கையை சுகாதாரமற்ற முறையில் வாழ்ந்து வந்தால், அவன் கற்றது அவன் வாழ் க்கைக்கும் அவனோடு கூடி வாழ்பவர்களுக்கும் பிரயோஜனமற்றதாக இருக்கும். உள்ளான மனிதன் கிறிஸ்துவின் சாயலில் நாளுக்கு நாள் வளரும்படிக்கு நீங்கள் கேட்ட தேவ வார்த்தைகளை உங்கள் வாழ்க் கையில் கைக் கொள்ளுங்கள். தேவ வசனமே உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லதாயிருக்கின்றது.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, நான் கேட்கும் உம்முடைய ஜீவ வார்த்தைகள் என் ஆத்துமாவிற்கு பலன் கொடுக்கத்தக்கதாக அவைகளில் நடக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:16