புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 29, 2020)

சபை ஐக்கியம்

எபிரெயர் 10:24-25

மேலும், அன்புக்கும் நற் கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரை யொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவி டாமல்,ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கட வோம்;


தேவானாகிய கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாகிய இஸ் ரவேல் ஜனங்களின் பிரதான ஆலயம் எருசலேமிலே இருந்தது. அந் நாட்களிலே, தேவனை தொழுது கொள்வதற்காக முன் குறித்ததினங் களிலே, ஜனங்கள் அங்கே கூடி வருவார்கள். எருசலேம் தேவாலயத்தி ற்கு சென்று வருவது, தேவ பக்கியுள்ளவர்களின் வாழ்க்கையிலே பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமாக இரு ந்து வந்தது. சம்பவம் 1: தாவீது என் னும் தேவ பக்தன் மேல் தேவனுடைய அபிN~கம் இருந்ததால், சவுல் என்ப வன், தன்னுடைய ராஜ்யபாரத்தை தா வீது பெற்றுக் கொள்வான் என்று பயந் ததினால், தாவீதை கொன்று போடு ம்படி வகை தேடித் திரிந்தான். இத னால் தாவீது தன் நாட்டை விட்டு ஓடிச் சென்று, மலைகளிலும் கெபிகளிலும் இருக்க வேண்டியதாயிற்று. அங்கிரு ந்து தான் எருசலேம் ஆலயத்திற்கு செல்ல முடியாதிருப்பதையிட்டு மன வேதனை அடைந்தான். சம்பவம் 2: பாபிலோன் ராஜாவினால் எருசலேம் முற்றுகையிடப்பட்டு, தானியேல் என் னும் வாலிபன் அங்கே கைதியாக கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அவன் அங்கேயிருந்து தினம் மூன்று வேளையும், எருசலேமை நோக் கியடி, தேவனுக்கு முன்பாக முழங் காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தி வந்தான். மேற்கூறிய சம்பவங்களிலே, தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளிலே அவ ர்கள் அகப்பட்டிருந்ததால் அவர்களுக்கு ஆலயம் செல்ல முயாதிரு ந்தது. எனவே, உங்கள் வாழ்க்கையிலும் தவிரக்க முடியாத, உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் ஏற்பட்டாலொழிய தேவ ஜனங்கள் கூடிவரும் சபைக்கு சென்று ஆராதிப்பதை நிறுத்திவிடா திருங்கள். சபை கூடிவராதிருப்பதற்கு அல்லது ஆராதனையில் கலந்து கொள்ளாதிருப்பதற்கு சாட்டுப்; போக்குகளை கூறாதிருங்கள். நாங்கள் தனித்திருந்து ஜெபிக்க வேண்டிய நேரங்கள் உண்டு. அதே வேளை யில் நாங்கள் சபை ஜனங்களோடு கூடி ஐக்கியப்பட்டு தேவனை ஆரா திக்கும் நேரமும் உண்டு. நாளானது சமீபித்துவருகிறதை உணர்ந்தவர்க ளாய் காலத்தை ஆதயப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

இருதங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, சபை கூடிவருதலை விட்டுவிட வகை தேடாதபடிக்கும், சபை ஐக்கியத்தின் ஒருமைப்பாட்டில் நாளுக்கு நாள் வளர்ந்து பெருகும்படிக்கும் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:1-2