புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 18, 2020)

நல்ல அறிக்கை செய்யுங்கள்

மத்தேயு 10:32

மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணு வேன்.


ஆம் பிரியமானவர்களே, நேற்றய நாளில் நாங்கள் தியானித்தது போல, பிதாவாகிய தேவன் தாமே எம்மை தம்முடைய பிள்ளைகள் என்று அழைப்பதற்கு வெட்கப்படவில்லை. எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து எங்களுக்காக அடிக்கப்படும் போது அவர் அவமானத்தையும் நிந்தையையும் சகித்துக் கொண்டார். ஆனால் இன்று சிலர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று வெளியரங்க மாக காட்டிக் கொள்வதற்கு தய ங்குகின்றார்கள். அதற்காக பல கார ணங்களை காட்டிக் கொள்கின்றார்கள். கிறிஸ்துவை சார்ந்து வாழ்கின்றோம் என்பதை எடுத்து கூறுவதற்கு வெட் கப்படுகின்றோம் என்பதை மறைப்ப தற்காக ஞானமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறிக் கொள்கின்றா ர்கள். கிறிஸ்துவை அறிக்கையிட தய ங்கும் எந்த ஞானமும் தேவ ஆவியி னால் உண்டானதல்ல. அது இந்த உல த்திற்குரியதான லௌகீக ஞானம்). முற்காலங்களிலே, கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவம் உண்டான போது, நிர்பந்தத்தின் நிமித்தம் பலர் இரகசிய சீஷர்களாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு, ராஜ்யத்தின் அதிகாரிகளி னால் கைது செய்யப்பட்ட போது, மரண பரியந்தம் இயேசு கிறிஸ் துவே இரட்சகர் என்று அறிக்கை செய்வதில் தயக்கமடையவில்லை. அது உபத்திரவத்தின் காலம். ஆனால் இன்றைய உலகிலே அநேக நாடுகளில் திறந்து வாசல் எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கின் றது. இந்த உலகத்திலே சில போலிக் கிறிஸ்தவர்கள் செய்யும் பொல் லாத கிரியைகளால் மனிதர்கள் பலர் கிறிஸ்தவத்தை குறித்து கேலி செய்கின்றார்கள். அதனால், கிறிஸ்து குறைவானவரானாரோ? இல்லை! இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் இருக் கின்றவராய் இருக்கின்றவர். வேதப்புரட்டர்கள் தங்கள் ஜீவியத்தின் பலனை நியாயத்தீர்ப்பின் நாளில் அடைந்து கொள்வார்கள். அவர்களின் போலியான வாழ்க்கையினால் நாங்கள் எங்களை அழைத்த இயேசுவை என் கர்த்தர் என்று கூற வெட்கப்படலாமா? இல்லை. எங்கள் இச்சை களை நிறைவேற்றும்படி மறைவான வாழ்க்கையை வாழக் கூடாது. மனிதர் முன்னிலையில் இயேசுவை அறிக்கையிடகிடைக்கும் சந்த ர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

என் மீது அன்பு கூர்ந்த பரலோக தந்தையே, மனிதர் முன்னி லையில் என் விசுவாசத்தை அறிக்கையிட வெட்கப்படாதபடி இருக்கும்படிக்கு என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 10:33