புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 16, 2020)

பரீட்சையின் நாள்

மத்தேயு 7:16

அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா?


பண்ணையாளர் ஒருவன், தன் பண்ணையின் ஒரு பகுதியிலே பல உயர் ரக அப்பிள் மரங்களை நாட்டி, அவைகளை நன்றாக பராமரித்து வந்தான். வழிப்போக்கர்கள் கண்டு ஆசைப்படும்படியாய் அந்த மரங் கள் யாவும் செழித்து வளர்ந்து ஆரோக்கியமுள்ளதாக காணப்பட்டது. ஆனால், கனி தரும் பருவங்கள் கடந் தும் அந்த மரங்களில் ஒரு அப்பிள் பழ த்தையும் காணவில்லை. அந்த அப்பிள் மரங்கள் தன் கனியாகிய அப்பிளை கொடுக்காவிட்டால் அதனால் உண்டா கும் பலன் அற்பமே. இதற்கொத்ததாக வே எங்கள் ஒவ்வொருவருடைய வாழ் வின் பலனும் அளக்கப்படும். எங்கள் வாழ்வில் திரண்ட ஆஸ்தியும், உயர்ந்த கல்வியும், சமுக அந்தஸ்தும் இருக்க லாம். கிழமைதோறும் நாங்கள் ஆலய த்திற்கு சென்று வரலாம். இந்த உலகத் தின் அளவுகோலின்படி வாழ் க்கை சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கலாம். ஆனால், எங்கள் வாழ்வில்; நாங்கள் கொடுக்கும் கனியினாலே நாம் யார் என்பதை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, எங்களைச் சூழ இருக்கும் மற்றவர்களும் நாங்கள் யார் என்பதை அறிந்து கொள்வா ர்கள். பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு படிப்பதற்கு வேண்டிய யாவற்றையும் கொடுத்திருக்கின்ற பெற்றோர், தங்கள் பிள்ளைகள் பாட சாலையில் பாடங்களை நன்றாக படிக்கின்றார்களா என்பதை எப்படி அறிந்து கொள்வார்கள்? பரீட்சையின் முடிவுகள் வரும்போது அதை அறிந்து கொள்வார்கள். முதல் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் தேவ னாகிய கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியவில்லை என்று எப்படி அறியப்பட்டது? சோதனையின் நாளிலே அவர்கள் கீழ்படியாமற் போ னார்கள் என்று அறியப்பட்டது. யாவும் நலமாயும் சௌக்கியமாயும் இருக்கும் போது, நான் என் மனைவியை நேசிக்கின்றேன் என்று கூறிக் கொள்வது ஒரு கணவனுக்கு இலகுவான காரியம். அதுபோலவே நல மும் சௌக்கியமுமான நாட்களிலே நான் என் கணவனுக்கு கீழ்ப்படிந்தி ருக்கின்றேன் என்று கூறுவது மனைவிக்கு இலகுவான காரியம். ஆனால் வாழ்வில் பரீட்சையின் நாட்கள் வரும் போதே தங்கள் நிலை மை என்ன என்பதை கணவனும், மனைவியும், அவர்களை சூழ உள்ள வர்களும் அறிந்து கொள்வார்கள். எனவே, எங்கள் தனிப்பட்ட, குடும்ப வாழ்க் கையிலே தேவன் விரும்பும் கனிகளை நாம் கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கென்று என்னை அழைத்த தேவனே, என் வாழ்விலே, உம்முடைய வார்த்தையின்படி, நீர் விரும்பும் கனியை கொடு க்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:22-23