புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 25, 2020)

கற்பாறையான நிலம்

சங்கீதம் 139:24

வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.


விதைப்பவன் உவமையைப் பற்றி பல முறை பேசக் கேட்டிருப்பீர்கள். தேவனுடைய வசனமாகிய விதையானது விதைக்கப்படும் போது சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது. மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறின போதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. இவ ர்கள் கற்பாறையான இடத்தில் விதைக் கப்பட்டவர்கள். இப்படிப்பட்ட மனிதர் கள் எங்கே இருக்கின்றார்கள்? சபை ஐக்கியத்திற்கு செல்லாமல் உலகத்தி லே இருக்கின்றார்களா அல்லது சபை ஐக்கியத்தில் இருக்கின்றார்களா? சிந் தித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட மனி தர்கள் தேவ வசனத்தை கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்று க்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்க ளுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலம் மாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள். இவர் கள் வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இட றலடைந்து போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களும் நாங்கள் கூடி ஆராதிக்கும் இடத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் யார்? அதா வது நாங்கள் தேவ வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண் டானவுடனே, அதைக்குறித்து முறுமுறுத்து, குழப்பங்களை ஏற்படுத்தி, இடறலடைந்து போகின்றவர்களாக இருப்போம் என்றால், நாங்களே அந்த கற்பாறையில் விதைக்கப்பட்ட விதையாக இருப்போம். கருப்பொ ருளாவது, இந்த தியானம் மற்றவர்களை குறித்ததல்ல. இது என்னை குறித்தது என்று ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். சபை யிலே வேறு சிலர் இடறலடையும் போது நான் என்ன செய்கின்றேன்? நானும் இடறலடைந்து விடுகின்றேனா? அவசரப்பட்டு என் சொந்த அபி ப்பிராயங்களை மையமாக வைத்து தீர்மானம் எடுக்கின்றேனா? அல்லது கர்த்தருடைய பாதத்திலே அமர்ந்திருந்து சமாதானத்திற்காக கர்த்தரை நோக்கிப் பார்க்கின்றேனா? பிரியமானவர்களே, வேதனை உண்டாக்கும் வழிகள் எங்களிடத்திலிருக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்து நாங்கள் கர்த்தரிடத்தில் திரும்புகின்றவர்களாக இருக்க வேண்டும். தேவ வச னத்தினிமித்தம் நஷ்டத்தை சகிக்க நேரிட்டாலும், சமரசம் செய்யாமல், முறுமுறுக்காமல், இடறலடையாமல், வேதனை உண்டாக்கும் வழிக ளில் நடக்காமல், இயேசு காட்டிய பாதையில் நடந்து முன்னேறுவோம்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, கற்பாறை நிலத்தில் விழுந்த விதையைப் போல, இடறலடைந்து, மனவேதனைகளை உண்டாக்காதபடிக்கு, நற்ப லனைக் கொடுக்கும் நிலமாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:9-19

Category Tags: