புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 17, 2020)

விலைமதிக்க முடியாத மீட்பு

1 கொரிந்தியர் 6:20

கிரயத்துக்குக் கொள்ளப்ப ட்டீர்களே;


எங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நாங்கள் அநுசரித்து வந்த மதச் சடங்காச்சார முறைமைகள் எங்களை நித்திய மரணத்தினின்று மீட்கவில்லை. இந்த உலகத்தினாலே உண்டான மிகையான ஐசுவரியமோ அல்லது அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியும் பொன்னும் மனிதனை நித்தி மரண ஆக்கினையின்று மீட்கவில்லை. நாம் செய்த நீதியின் கிரியைகள் எங்களை மீட்கவில்லை. நாம் கிரயத்திற்கு கொள்ளப்பட்டோம். அதாவது விலைகொடு த்து வாங்கப்பட்டோம். குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து வின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. இந்த மீட்புக்கு மனித முறைமைகளின்படி ஒரு விலையை போட்டுக் கொள்ள முடியாது. கீழ்ப்படியாமையினால் மனிதகுலம் இழந்து போன நித்திய வாழ்வை, மறுபடியும் பெற்றுக் கொள்ளும்படிக்காக, உன்னதராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மையே தாம் எமக்காக பலியாக ஒப்புக் கொடுத்து எங்களை தமக்குச் சொந்தமாக வாங்கிக் கொண்டார். இது தேவனுடைய கிருபை. எனவே விலைமதிக்க முடியாத அந்த அருமையான அந்த மீட்பைப் பெற்ற நாம், அந்த மீட்பிற்கு ஒரு விலையைப் போட்டு, மறுபடியும் எம்மை நாமே விற்றுவிடக் கூடாது. எப்படியாக மனிதர்கள் தங்களை விற்றுவிடக்கூடும்? சிலர் தங்கள் வேலைக்காக (உழைப்புக்காக) எதையும் விட்டுவிட ஆயத்தமாக இருக் கின்றார்கள், வேறு சிலர் உல்லாசமாக வாழ வேண்டும் என்று பல விதமான களியாட்டங்களுக்கு தங்கள் சிந்தையையும், சரீரத்தையும் ஒப் புக் கொடுக்கின்றார்கள். இன்னும் சிலர் கல்வி, கலை, அந்தஸ்து என்று அவைகளுக்காக எதையும் செய்ய ஆயத்தமாக இருக்கின் றார்கள். இப் படியாக இந்த உலகத்தினாலே ஏற்றுக் கொள்ளப்பட்டதும், நன்மையாக தோன்றுகின்ற காரியங்களுக்கும் மனிதர்கள் தங்களை அடிமைகளாக்கிக் கொள்கின்றார்கள். இவை யாவற்றிற்கும் இந்த பூமியிலே ஒரு விலை உண்டு. நாம் மறுபடியும் இவைகளுக்கு அடிமைப்படுவோமாக இருந் தால், ஆதியிலே எங்கள் முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாளைப் போல, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதற்கு பதிலாக, அந்தகார லோகாதிபதியாகிய வஞ்சிக்கும் பிசாசானவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிகின்றவர்களாக மறுபடியும் விட்டுவந்த பாவ வாழ்க்கைக்கு சென்று விடுவோம். பிரியமான சகோதரர்களே, இந்த பூமியிலுள்ள எதுவும் தேவனாலே நாங்கள் பெற்றிருக்கும் மீட்புக்கு இணையானதல்ல.

ஜெபம்:

ஈடு இணையற்ற தேவனே, ஒப்பற்ற, விலை மதிக்க முடியாத உம்முடைய திருக்குமாரனின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட நான், அந்த மீட்பை அற்பமாக எண்ணாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:18-19