புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 16, 2020)

அனுப்புகிறவர் நான் அல்லவா

நியாயாதிபதிகள் 6:15

ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.


ஒரு காலகட்டத்திலே, தேவனுடைய ஜனங்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து பின்மாற்றமான வாழ்க்கை வாழ்ந்த போது, மீதியானியரிடம் தேவ ஜனங்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். இஸ்ரவேல் ஜன ங்கள் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கத்தின் நிமித்தம் மலைகளிலுள்ள கெபிகளையும், குகைகளையும், அரணான ஸ்தலங்களையும் அடைக்கலமா க்கிக்கொண்டார்கள். மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து, அவர்களது விளைச்சலையும், மந்தைகளையும் மிருக ஜீவன்களையும் அழித்து வந்தார்கள். தேவ ஜனங்கள் தமக்குண்டான நெருக்கத்தில் மனந்திரு ம்பி மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். அந்நாட்க ளிலே கிதியோன் என்னும் மனிதன், கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீப மாய் அதைப் போரடித்தான். கர்த்தரு டைய தூதனானவர் அவனுக்குத் தரிச னமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த் தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக் கிற இந்தப் பலத்தோடே போ. நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என் றார். அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதி னாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளி யது. என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என் றான். அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார். பிரியமானவர்களே, தேவனாலே வல்லமையாக பயன்படுத்தபட்ட மனிதனாகிய கிதியோன் தன் தகுதியைக் குறித்து தேவனிடம் கூறியவை களைப் பாருங்கள். தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்துகின்ற எளிமையானவர்கள் தேவ தூதர்களை தரிசிக்கின்றார்கள். எனவே தேவ னுக்கு முன்பாக உங்களை வெறுமைப்படுத்தி ஒப்புக் கொடுங்கள், தேவன் தமக்கு உகந்த பாத்திரமாக உங்களை பயன்படுத்துவார்.

ஜெபம்:

உள்ளங்களை ஆராய்ந்தறிக்கின்ற தேவனே, என் உள்ளத்தில் பெருமைக்கு இடங் கொடுக்காமல், உண்மையுள்ள தாழ்மையான உள்ளத்தை கொண்டிருக்கும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத் 33:14-17