புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 15, 2020)

தகுதி பெற்றவன் யார்?

1 சாமுவேல் 2:8

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிரு ந்து உயர்த்துகிறார்.


குறிப்பிட்ட ஸ்தாபனமொன்றின் அலுவலகத்தில் வேலையை பெற்றுக் கொள்ளும்படிக்கு நேர்முகத்தேர்வுக்காக (Interview) ஒரு மனிதன் அழை க்கப்பட்டிருந்தான். எப்படியாவது அந்த வேலையை தான் பெற்றுக் கொள்ளும்படிக்கு தன்னிடம் இருந்த கல்வி மற்றும் தனித்துவமான திற மைகளையும் (skills), தகுதிகளையும், வேலை அனுபவங்களையும் மட்டுப்ப டுத்தப்பட்ட நேரத்திற்குள், ஒன்றுகூட விடாமல் நேர்;த்தியாகக் கூறி முடித்தான். அவன் தன்னைப் பற்றி கூறியவைகள் யாவும் உண்மையே. பொதுவாக ஸ்தா பனங்களிலே வெற்றிடங்களை நிரப்புவ தற்கு, அந்தந்த வேலைகளை செய்வ தற்கு தேர்ச்சி பெற்றவர்களையும், அனுபவமுள்ளவர்களையும், தங்கள் ஸ்தாபனத்தின் கலாச்சாரத்திற்கு ஏற்றவர்களையும், சராசரியான ஊதியத்தை பெற சம்மதிக்கின்றவர்க ளையும் தெரிந்தெடுப்பார்கள். அவ்வண்ணமாகவே, வேலையை தேடிச் செல்பவர்களும், தங்களுக்கு பிடித்த ஸ்தாபனத்தில், சராசரியான வேலையும், அதிகப்படியான சம்பளமும், தங்களுக்கு ஏற்ற முகாமை யாளரும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவை இந்த உலகத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கு முறைகள். ஆனால் தேவனு டைய வேலையை செய்வதற்கு ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன? யார் அவருடைய ஊழியத்தை செய்ய முடியும்? கர்த்தருக்கு முன்பாக நின்று நான் இதை செய்ய பாத்திரன் என்று யாரால் கூறமுடியும்? இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; கர் த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்த மல்லவோ? பலவான்களின் வில் முறிந்தது. தள்ளாடினவர்களோ பலத் தினால் இடைகட்டப்பட்டார்கள். திருப்த்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலி வேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார் கள்;. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவ னைக் குப் பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்கார வும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமி யின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். ஆதலால் கர்த்தருக்கு முன்பாக எங்க ளைத் தாழ்த்துவதே எங்களுக்கு இருக்க வேண்டிய தகுதியாகும்.

ஜெபம்:

சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதலளிக்கும் தேவனே, உம்முடைய திவ்விய அழைப்பைப் பெற்றுக் கொள்ள என்னிடம் எந்த தகுதியும் இல் லை. நீர் எனக்குத் தந்த இந்தப் பெரிதான சிலாக்கியத்திற்காக நன்றி! இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - சங்கீதம் 24:2-4

Category Tags: