புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 23, 2020)

தவறிப் போகும் நேரங்களில்

நீதிமொழிகள் 24:16

நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.


ஒரு சபை ஐக்கியத்திலே, அநேக வருடங்களாக தேவனை ஆராதித்து வந்த வயதான ஐயா ஒருவர், சக விசுவாசியுடன் ஏற்பட்ட கரு த்து முரண்பாட்டினாலே, நிலை தவறி, சக விசுவாசியை கடுஞ் சொற்களால் கடிந்து கொண்டார். வயதிலே முதிர்ந்தவரை எப்படி எதிர்த்துப் பேசுவது என்று, மற்ற விசுவாசியும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார். சில நாட்கள் சென்ற பின், அந்த வயதா னவர், தான் பேசிய வார்த்தைகளை குறித்து மிகவும் மனவருத்தப்பட்டார். சந்தர்ப்பம் கிடைத்த போது, மற்றய விசுவாசியின் வீட்டிற்கு சென்று, தான் தவறு செய்தேன் என்று அறிக் கையி ட்டு, தன்னை மன்னித்துக் கொள்ளு ம்படி வேண்டிக் கொண்டார். ஐயா, நீங்கள் என்னுடைய தகப்பன் போன் றவர், இப்படியெல்லாம் மன்னிப்பு கேட் பதானது, எதற்கு என்று சக விசுவாசி கூறினான். தம்பி, எத்தனை வயதாகினாலும், எங்களது வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் தியா னங்களும் கர்த்தருடைய சமுகத்திலே பிரியமாக இருக்க வேண்டும் என்று அந்த இளம் விசுவாசியுடன் ஒப்புரவாகினார். நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்;. அது சிறிய காரியமாக இரு ந்தாலும், பெரிய காரியமாக இருந்தாலும், அவன் தன் தேவனை நம்பி யிருப்பதால், சத்திய ஆவியானவர், மெய் வழியிலே அவனை நடத்திச் செல்வார். அவனுடைய மனம் தேவனோடு இசைந்திருப்பதால், தன் குற்றங்களை பாராமுகமாக விட்டுவிடாமல் அவற்றை அறிக்கையிட்டு சீர்பொருந்துகின்றான். தன்னைத்; தானே தேவ சமுகத்திலே தாழ்த்துவ தைக் குறித்து வெட்கமடையான். ஆனால், தான் அறிந்தோ அறியாம லோ தன் சகோதரருக்கு செய்யும் தவறுகளைக் குறித்து அவன் வெட்கமடைகின்றான். பிரியமானவர்களே, தவறுகள் செய்யாமல், ஞான முள்ளவர்களாய் நடந்து கொள்வதே நன்மையானது. ஆனால் எங்கள் வாழ்க்கையில்;: எங்கள் குடும்பத்தில், வேலை செய்யும் இடத்தில், வெளியிடங்களில், கல்வி கற்கும் நிலையங்களில், நண்பர்கள் உறவி னர்கள் மத்தியில், சபை ஐக்கியத்தில் நாங்கள் தவறிப் போகும் சூழ்நி லைகள் உண்டாகும் போது, நாம் அந்த தவறுகளை ஏற்றுக் கொண்டு, மனந்திரும்புவதும், நம் வாழ்க்கையை வேத வாக்கியங்களின்படி ஆரா ய்ந்து, சீர்படுத்திக் கொள்வதும், மறுபடியும் எழுந்திருப்பதும் நீதிமான் களின் பண்பாக இரு க்கின்றது.

ஜெபம்:

நீதியின் தேவனே, நான் தவறிப் போகும் சந்தர்ப்பங்களில், மனதை கடினப்படுத்தாமல், சம்மந்தப்பட்ட சகோதர சகோதரிகளோடு ஒப்புரவாகிக் கொள்ளும் உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 28:13