புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 05, 2020)

“எனக்கு அவரை பிடிக்கவில்லை”

லூக்கா 6:32

உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.


எங்களுக்கு ஆவிக்குரிய போராட்டம் உண்டு என்று இரண்டாம் திகதி தியானத்திலே பார்த்தோம். என்னுடைய நாளாந்த வாழ்க்கையிலே அந்த போராட்டங்கள் என்ன? இந்த உலகத்திலே எங்களுக்கு உபத் திரவங்களும், சவால்களும் உண்டு. சில வேளைகளிலே அவை எங் கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நாளா ந்தம் மனிதர்கள் தங்கள் மனதிலே உண் டாகும் போராட்டங்களை பொருட்படு த்துவதில்லை. அவற்றுள் சிலவற்றை அடுத்த சில நாட்களாக தியானிப் போம். எடுத்துக்காட்டாக, நீங்கள் செல் லும் சபையில் உள்ள ஒரு சக விசு வாசியை ஏதோ ஒரு காரணத்தினால் உங்களுக்கு பிடிக்கவில்லை. அந்த நபர் யாராகவும் இருக்கட்டும். ஆனால் அப்படியான சிந்தை உங்கள் மனதிலே தோன்றும் போது, உங்கள் மனதின் யோசனையை உடனடியாக தேவனு டைய வார்த்தையின்படி சரி செய்து கொள்ள வேண்டும். அந்த சிந் தையை உங்களைவிட்டு அகற்றாதவிடத்து, அது ஒரு சிறிய பிரிவி னையின் வித்தாக உங்கள் இருதயத்திலே விதைக்கப்படும். அது வள ர்ந்து அதன் கனியை அதன் காலத்தில் கொடுக்கும். மனிதன் எதை விதைக்கின்றானோ அதை அறுப்பான். (கலாத்தியர் 6:8). “உங்கள் சத் துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள்” என்று இயேசு கூறி யிருக்கின்றார். அதாவது, எங்கள் சத்துருவையே நேசிக்க வேண்டுமா னால், எங்கள் உடன் சகோதரரை எவ்வளவு அதிகமாக நேசிக்க வேண் டும். சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு வேளை அந்த நபர் எங்களு க்கு தீமை செய்திருந்தாலும், கசப்பான பிரிவினையின் வேர் எங்கள் உள்ளத்தில் முளைத்தெழும்பாதபடிக்கு எங்கள் இருதயத்தை வேத வார்த்தையின்படி காத்துக் கொள்ள வேண்டும். எனவே, எந்தவிதமான பகையையும், வன்மத்தையும் உண்டுபண்ணும் சிந்தனைகளை எங்களை விட்டு முழுமையாக அகற்றி விடவேண்டும். சபை ஐக்கியத்திற்கு வரும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் ஆவிக்குரிய வளர்ச்சியின் ஒவ் வொரு கட்டத்தில் இருக்கின்றார்கள். சிலர், புதிதாய் பிறந்த குழந்தை யைப் போலவும், சிலர் பிள்ளைகளைப்போலும் இருக்கலாம். எனவே, திடனற்றுப் போகாதபடிக்கு அன்போடு அறிவுரையை வழங்குங்கள். அவர் கள் மேல் பொறுமையுள்ளவர்களாயிருங்கள்.

ஜெபம்:

எல்லோரையும் அன்பு செய்யும் தேவனே, என் மனதிலே எந்த மனிதனைக் குறித்த கசப்பையும் வளரவிடாதபடிக்கு, என் இருதயத்தை நீர் தங்கும் ஆலயமாக வைத்துக் கொள்ள கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:10