புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 15, 2020)

வேலை செய்யும் இடங்களிலே ஆசீர்வாதம்

ஆதியாகமம் 39:5

கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்;


நாங்கள் வேலை செய்யும் இடங்களின் சொந்தக்காரரோ அல்லது அதிகாரிகளோ தேவனாகிய கர்த்தரை அறியாதவர்களாக இருக்க லாம். ஆனால் அவ்விடங்களிலே எங்களது நற்சாட்சியான வாழ்க்கை யின் நிமித்தம் கர்த்தர் நாம்; வேலை செய்யும் இடத்தை ஆசீர்வதிப்பார். யோசேப்பு என்னும் இளைஞன், தன் சொந்த சகோதரர்களினாலே, அந்நிய தேசத்தவர்களின் கையிலே அடிமையாக விற்கப்பட்டு, எகிப்து தேசத்தின் பிரதானிகளில் ஒருவனாகிய போர்த்திபார் என்பவனின் வீட்டில் வேலைக்காக பணி க்கப்பட்டிருக்கின்றான். அவனுக்கு சொந்த பந்தங்கள் என்று கூற யாருமில்லை. தன் வாழ்க்கையே தனக்கு சொந்தமில்லை என்ற நிலையிலே ஒரு அந்நியனின் வீட்டிலே வேலை செய்து வந்தான். கர்த்தர் யோசேப்போடே இருந்ததால், அவன் செய்த எல்லா காரியங்களையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணினார். கர்த்தர் அவ னோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமானன் கண்டு: யோசேப்பி னிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். பிரியமான சகோதர சகோதரிகளே, கர்த்தர் அவனோடு இருக்கும்படிக்கு அவன் கர்த்தருக்கு பிரியமுள்ள வனாக நடந்து கொண்டான். அதை அவனு டைய எஜமானன் காணு ம்படியாக சாட்சியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினான். யோசே ப்பின் நிமித்தம் கர்த்தரை அறியாத அந்நியனின் வீடு ஆசீர்வதிக் கப்பட்டது. பொதுவாக மனிதர்களின் வாழ்வில், தங்களுக்கு ஏற்படும் துன்பமான சூழ்நிலைகளில் தரித்து நின்று விடுகின்றார்கள். சில வேளைகளிலே சுய அனுதாபத்தை விரும்பி, “அந்த மனிதனால் தான் நான் இவ்வளவு கஷ்டப்படுகின்றேன்” என்று கூறிக் கொள்வார்கள். நாங்கள் நம்பியிருந்தவர்களால் ஏற்படும் அல்லது ஏற்பட்ட துன்பங் களை நினைத்து சுய அனுதாபத்துடன் வாழாமல், யோசேப்பைப் போல எதிரான சூழ்நிலைகளை கண்டு பயப்படாமல், எங்களைத் தாழ்த்தி, கர்த்தருக்கு கீழ்ப்படிவுள்ளவர்களாக நாங்கள் வேலை செய்யும் போது, கர்த்தர் எங்களை உயர்த்துவார். அதுமட்டு மல்ல நாங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமுள்ளவர்களாக மாற்றப்படுவோம்.

ஜெபம்:

பரலோக தந்தையே, எந்த சூழ்நிலையிலும் என் வாழ்க்கையைக் குறித்த சுய அனுதாபத்தால் அழிந்து போகாமல், உமக்குப் பிரியமான வாழ்க்கை வாழ உற்சாகமுள்ள ஆவியைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:5-8