புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 25, 2019)

நீங்கள் உலகத்தின் சுடர்கள்

ஏசாயா 9:2

இருளில் நடக்கிற ஜன ங்கள் பெரிய வெளிச்சத் தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடி யிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது


அந்தகார இருளில் இருந்து, ஆச்சரியமான தெய்வீக ஒளிக்கு மனிதகு லத்தை வழிநடத்தும்படி, வாக்களித்த மீட்பர் வெளிப்படும்படியாய் அநே கர் தாகத்தோடு காத்திருந்தார்கள். வாக்களிக்கப்பட்ட அந்த மீட்பர் இந்த உலகிலே பிறந்த போது, அந்த நற்செய்தியை தேவ தூதன்;, வயல்வெளியில் தங்கி மந்தையை காத்துக் கொண்டிருந்த எளிமை யான மேய்ப்பர்களுக்கு அறிவித்தான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன் னதத்திலிருக்கிற தேவனுக்கு மகி மையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவ தாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். மீட்பரைக் காணும்வரை மரிக்கமாட்டாய் என்று வாக்குப்பெற்ற சிமியோனும், அன்னாள் என்னும் தீர்க்க தரிசியும் பரிசுத்த குழந்தையாகிய இயே சுவை ஆலயத்தில் கண்டு மகிழ்ந்தா ர்கள். பின்பு, கீழ்தேசத்திலிருந்து, நீண்ட பயணம் செய்து வந்த ஞானிகளும் அவரைக் கண்டு பணிந்தார்கள். அன்று இந்தப் பூமியிலே தோன்றிய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் இந்த நாளிலே நீங்களும் மகிழ்ந்து களிகூருங்கள். உலகம் முழுவதும், பற் பல ஜனங்கள் இந்த நாளிலே, குடித்து, வெறித்து, உள்ளவர்களுக்கு பரிசுப் பொருட்களைக் கொடுத்து, பெரும் களியாட்டத்துடன் இந்த நாளைக் கழிக்கின்றார்கள். நாங்களோ எங்கள் மீட்பரை அவ்வண் ணமாக அறியவில்லை. ஆதியிலே வாக்களிக்கப்பட்ட மீட்பர், இரண் டாயிரம் வருடங்களுக்கு முன்பதாக இந்தப் பூமியிலே பிறந்தார். பின்பு முன்குறிக்கப்பட்ட நாளிலே எங்களுக்குள் பிறந்தார். புதிய வாழ் வைத் தந்தார். தம்முடைய சாட்சிகளாக எங்களை நியமித்தார். அவர் எவ்வ ண்ணமாக எங்களை தேடிக் கண்டுபிடித்து, மீட்டுக்கொண்டார் என்ற சாட்சியை நாம் அறிவிக்க வேண்டும். உண்ண உணவின்றி உடு க்க உடையின்றி வாடிடும் வறியோருக்கு இன்னும் அதிகமாக உதவிகளை செய்ய வேண்டும். பிதாவாகிய தேவன் மனித குலத்தின்மேல் காட்டிய உன்னத அன்பை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும். உலகத்தின் வெளிச்சமாக ஏற்படுத்தப்படடிருக்கின்ற நாங்கள், இந்த மகிழ்ச்சியின் நாளிலே இன்னும் அதிகமாக உலகத்தைப் பிரகாசிப்போம்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, இந்த உலகத்தை மீட்கும்படியாக உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவை எங்களுக்குத் தந்து, எங்கள் மேல் பாராட்டிய மேலான அன்பிற்காக உமக்கு நன்றி! இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:14