புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 24, 2019)

இயேசுவின் சாட்சிகள் நாங்கள்

அப்போஸ்தலர் 1:8

பரிசுத்த ஆவி உங்களிட த்தில் வரும்போது நீங் கள் பெலனடைந்து, எரு சலேமிலும், யூதேயா முழு வதிலும், சமாரியா விலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.


இயேசுவுக்கு நாங்கள் சாட்சிகளாக வாழ்வது என்பது, அவருக்காக மற்றவர்களுடன் வழக்காடுவது அல்ல. கர்த்தராகிய இயேசு தாமே, இந்த பூவுலகத்தைவிட்டு பரலோகத்திற்கு எழுந்தருள முன்பு, வேத வாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி தம்முடைய சீ~ர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறி ஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரி த்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண் டியதாயிருந்தது. அன்றியும் மனந்திரு ம்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் என் னுடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப் படவும் வேண்டியது என்றும், நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கி றீர்கள் என்று கூறினார். அவர்களோ தங்கள் மரணபரியந்தமும், இயேசுவின் சாட்சிகளாக இருந்தார்கள். சுவிசே~ த்தின் நிமித்தம் நிந்தைகளையும் அடி களையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;, கல்லெறியுண்டார் கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட் சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினா லே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள் ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர்க ளுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புக்களிலேயும் சித றுண்டு அலைந்தார்கள். பரமபிதாவின் சித்தத்தை நிறை வேற்றும்படி க்கு அவர்கள் உன்னதத்திலிருந்து வரும் பரிசுத்த ஆவி யின்; பெலத்தினால் தரிப்பிக்கப்பட்டார்கள். தேவனானவர், அதே பரிசுத்த ஆவியானவரை எங்களுக்கும் கொடுத்திருக்கின்றார். ஆதி அப்போஸ்த லர்களைப் போன்ற பாடுகள் எங்களுக்கில்லாதிருந்தாலும், எங்களுக்கு ஏற்படும் அற்பமான பாடுகள், எதிர்ப்புக்கள், நிந்தைகள், அவமானங் களையும் வேத வார்த்தைகளின்படி சகித்துக் கொண்டு, நெருக்கடி வேளைகளிலும் தெய்வீக சுபாவங்களை வெளிக்காட்டும் உண்மை யான சாட்சிகளாக கிறிஸ்துவுக்கென்று நாம் வாழ வேண்டும்.

ஜெபம்:

பரலோக தந்தையே, நீர் எனக்குச் செய்த நன்மைகளை கூறுவ துடன் நிற்காமல், இக்கட்டான சூழ்நிலையிலும், உம்முடைய வார்த்தை யின்படி நான் உம்முடைய சாட்சியாக வாழ என்னை பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 24:45-49