தியானம் (மார்கழி 10, 2019)
நல்ல போர்ச் சேவகனாய்...
2 தீமோத்தேயு 2:3
நீயும் இயேசுகிறிஸ்துவு க்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.
இராஜபக்தியுள்ள ஒரு இளைஞன் தான் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற வாஞ்சையுடன் நாட்டின் பட்டாளத்திலே இணைந்து கொண்டான். அந்த இளைஞனுடைய தேசப்பற்றையும், தன் அரசனை குறித்த விசுவாசத்தையும் கண்ட தளபதி, அவனை அரண்மனையில் பாதுகாவலர் குழுவிலே சேர்த்துக் கொண்டான். நாட்டிலே பலவி தமான நன்மை தீமையான சம்பவங்கள் நடைபெற்றாலும், காலநிலை எப்படியாக இருந்தாலும், நாட்டின் பொருளாதார நிலைமையானது உயர் வாகவோ அல்லது தாழ்வாகவோ இரு ந்தாலும், சகபோர்வீரர் சோர்ந்து போ னாலும் அந்த இளம் போர்வீரனின் எண்ணமும், ஏக்கமும் எப்போதும் தான், தன் அரசனை பாதுகாக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. அதாவது, தன் னுடைய வேலைக்கு அடுத்த அலுவல்களினால் தன் நோக்கத்தை குலைத்துப் போடாமல் தன்னுடைய எஜமானனுக்கு பிரமாணிக்கமுள்ள வனாக இருந்தான். “தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக் கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.” எனவே, பாடுகள் வந் தாலும், வேதனை துன்பங்கள் வந்தாலும், உன்னை அழைத்த கர்த் தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச் சேவகனாக இருக்கும் படி அவைகளை கிறிஸ்துவின் நிமித்தம் சகித்துக் கொண்டு, இலக் கின்மேல் கண் வைத்து ஒடு என்று தீமோத்தேயு என்னும் ஊழியரு க்கு பவுல் அறிவுரை கூறியிருக்கின்றார். நாங்களும் எங்களைத் தம் முடைய மாறாத அன்பினால் தெரிந்து கொண்ட எஜமானனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு விசுவாசமுள்ள நல்ல போர்ச் சேவகர்களாக இருக்க வேண்டும். ஒரு பட்டாளத்திலே உள்ள போர்வீரர்கள் ஒரு வரோடொருவர் முரண்பாடாக இருந்தால், எதிரியானவன் இலகுவாக அந்த பட்டாளத்தை மேற்கொண்டு விடுவான். எனவே, நாங்கள் ஒரு மனதோடு இசைந்த ஆத்துமாக்களாக தேவன் எங்களை அழைத்த நோக் கத்தையே சிந்தையில் வைத்தவர்களாக முன்னேறிச் செல்ல வேண் டும். எங்கள் அழைப்பின் நோக்கத்தை கெடுத்துப் போடும் எந்த ஒரு காரியத்திலும் நாங்கள் சிக்கிக் கொள்ளாதபடிக்கு, அவைகளை எங்கள் மாம்ச பெலத்தினால் அல்ல, தூய ஆவியானவரின் வல்ல மையால் மேற்கொண்டு முன்னேறுவோம்.
ஜெபம்:
அன்பின் பரலோக தந்தையே, விசுவாசமுள்ள நல்ல போர்ச் சேவகனைப் போல, பாடுகள் வந்தாலும், தயங்காமல் உம் சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்றி முடிக்க என்னை வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:12-14