புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 04, 2019)

இருதயத்தை காத்துக் கொள்வோம்

சங்கீதம் 119:11

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.


ஒரு கிராமத்திலே வாழ்ந்து வந்த மனிதனானவன், இயற்கை மூலிகைக ளைக் குறித்து மெய்ச்சப்படத்தக்க அறிவையுடையவனாக இருந்தான். ஆனால், அவனிருந்த பண்ணையிலே எவ்விதமான மூலிகைச் செடிக ளையும் அவன் வளர்த்ததுமில்லை, அவைகளை தேவை என்று சேர் த்து வைத்ததுமில்லை. கோடை காலம் முடிந்து, உறைபனி கொட்டும் கடும் குளிர்நாட்கள் ஒன்றிலே அவனுடைய சின்ன மகள் சுகவீன முற்றதால். காலையிலே பரிகாரியிடம் சென்று மூலிகைகள் பெற்றுக் கொள் ளும்வரைக்கும், அந்த இரவில் தன் மக ளுக்கு கொடுப்பதற்கு கைவசம் எந்த மூலிகைகளையும் அவன் சேர்த்து வைக் கவில்லை. இக்கட்டான நேரத்திலே தன் மதியீனத்தை அவன் உணர்ந்து கொண் டான். இதற்கொத்ததாகவே, இன்று வேத வார்த்தைகளைக் குறித்த அறிவு மனிதர்கள் மத்தியிலே பெருகியிருக்கி ன்றது. சொந்த முயற்சிகளாலும், சபைப் போதனைகள் வாயிலாகவும், புத்தகங்களை வாசிப்பதாலும், இன்றநெற் ஊடகங்கள் வழியாகவும் மற்றும் சிலர் வேதாகமக் கல்லூரிகள் வாயிலாகவும் அதிகதிகமாக கற்றுக் கொள்கின்றார்கள். நாங்கள் இரக்கத்தை குறித்து கற்று அறி ந்து கொள்வது நல்லது. ஆனால் எங்கள் வாழ்க்கையில் மற்றவர்களு க்கு இரக்கத்தை காண்பிக்காவிட்டால், நாம் பெற்ற அந்த அறிவில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இவ்வண்ணமாக, இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே வேதத்தை முறைப்படி கற்ற வேத வல்லுனர்கள் பலர் வேதத்தின் கருப்பொருளை மறந்து போய்விட்டா ர்கள். ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: மனு~ர் பிரவேசியா தபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிர வேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடு கிறதுமில்லை என்றார். இவர்களை போன்றவர்கள் தேவனுடைய வார் த்தைகளை அறிந்திருந்தும் அவைகள் பெலவீன நேரங்களிலும், ஆப த்து நாட்களிலும் தங்களுக்கு உதவும்படி தங்கள் இருதயத்திலே பதி த்து வைப்பதில்லை. ஒருவனுடைய இருதயம் எதினால் நிறைந்திருக்கி ன்றதோ, அதுவே அவனிடத்திலிருந்து புறப்படும். எனவே, ஆபத்து நாட் களிலே எதிரியை மேற்கொள்ளும்படிக்கு தேவனுடைய வார்த்தைகளை எங்கள் இருதயத்தின் பொக்கி~மாக காத்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, ஆபத்து நாட்களை மேற்கொள்ளும்படிக்கு, எல்லாக் காவலோடும் என் இருதயத்தை உம்முடைய வார்த்தையின்படி காத்துக் கொள்ள என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:21