புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 03, 2019)

பெலவீனத்தில் என் துணை

நியா 6:14

உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.


ஒரு காலகட்டத்திலே தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர், தங்கள் தேவனை மறந்து அவரைவிட்டுத் தூரம் சென்றதால், எதி ரிகளால் மிகவும் சிறுமைப் படுத்தப்பட்டார்கள். மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்க ளாக அடைக்கலங்களாக்கிக் கொண் டார்கள். மீதியானியரோ தங்கள் மிருக ஜீவன்களோடும், தங்கள் கூடாரங்க ளோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திர ளாய் வருவார்கள்; அவர்களும் அவ ர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாத தாயிருக்கும்; இந் தப்பிரகாரமாக இஸ் ரவேல் தேசத்தைக் பாழாக்கிக் கொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் தங்கள் தேவ னாகிய கர்த்தரை விட்டுத் தூரம் சென் றதை உணர்ந்து மனந்திரும்பி, தங்கள் தேவனை நோக்கிப் பார்த்தார்கள். இஸ் ரவேல் கோத்திரங்களுக்குள்ளே கிதியோன் என்னும் சிறுமையும் எளி மையுமான மனிதன் இருந்தான். கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ. நீ இஸ்ர வேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். நான் உன்னோடேகூட இரு ப்பேன்; ஒரே மனு~னை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார். பின்பு கர்த்தர், கிதியோனோடே கூட இரு ந்தார். அவனும் கர்த்தர் சொன்னபடியே யுத்தத்திற்கு ஆயத்தப்படு த்தினான். 300 போர்வீரர்களோடு மீதியானியரின் ஒரு பலத்த இரா ணுவத்தை இலகுவாக மேற்கொண்டான். பிரியமானவர்களே, எங்கள் போராட்டத்தின் பெலன் எங்கள் கர்த்தர். எங்கள் வாழ்வில் நாங்கள் சமாதானத்தை இழந்து, அங்கலாய்த்துக் கொண்டிருந்தால், நாங்கள் கர்த்தரைவிட்டு தூரம் சென்றுவிட்டோம் என்பதே பொருள். கர்த்தரி டத்திற்கு திரும்புங்கள்! உனக்கு இருக்கும் இந்த பெலன் போதும் நான் உன்னுடனே கூட இருக்கின்றேன் என்று கூறியிருக்கின்றார். நாங் கள் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும் போது எங்கள் பெலவீ னங்களை நாங்கள் எளிதில் மேற்கொண்டு விடுவோம்.

ஜெபம்:

என் பெலனான தேவனே, என் பெலவீனத்தில் நான் மாண்டு போகாமல், உம்மிலே பெலன் கொள்ளும்படி உம்முடைய வார்த்தைக ளின்படி வாழ, பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 12:9