புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 08, 2019)

உன் இருதயம் ஸ்திரப்படும்

சங்கீதம் 27:14

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடம னதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.


என்னுடைய பெலன் இருக்கும் வரை ஓடினேன். இப்பொழுது எப்ப க்கமும் நெருக்கப்பட்டு வலுவிழந்து போனேன். இனி என்னால் ஒன் றும் செய்ய முடியாது. வாழ்க்கையில் இளைப்படைந்து போனேன் என்று ஒரு மனிதன் நம்பிக்கையிழந்தவனாய் தன் நிலைமையை எடுத் துக் கூறினான். இப்படியான பெலவீனமான நிலைகள் வேதத்திலே காணப்படும் பல பரிசுத்தவான்களின் வாழ்;க்கையிலும் ஏற்பட்டது. யோபு என்ற பக்தன் யாவற்றையும் இழந்து உருக்குலைந்த நிலையிலிருந்தான். மர ணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொ ண்டது. துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. பாதாளக்கட்டுகள் என் னைச் சூழ்ந்துகொண்டது. மரணக்கண் ணிகள் என்மேல் விழுந்தது என்று தாவீது ராஜா பாடினார். நான் ஒரு வன் தான் மிஞ்சியிருக்கின்றேன் என்று எலியா தேவனிடம் முறையிட்டார். கர் த்தராகிய இயேசுவோடு இருந்த பேதுரு, ஒரு இராத்திரியிலே தான் நேசித்த இயேசுவை தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தார். வாழ் க்கையில் எல்லாம் முடிந்து விட்டது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அகப்பட்டிருந்தார். ஆனால் இவர்கள் யாவரும் தங்கள் பெலவீன நேரத்திலே தங்களைத் தாழத்;தி தேவனிடம் ஒப்புக் கொடு த்தார்கள். இவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய ஆரம்பம் உண் டானது. அது போலவே, எங்களுடைய வாழ்க்கையிலும் பெலவீன ங்கள் சூழந்து கொள்ளும் போது, தேவனுக்காக காத்திருக்க வேண் டும். “பூமியின் கடையாந்தரங்களைச் சிரு~;டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆரா ய்ந்து முடியாதது. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடு த்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவி ழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.” கர்த்தராலே எங்கள் இருதயம் ஸ்திரப்படும்.

ஜெபம்:

என் பெலவீனங்களை அறிந்த தேவனே, வேதத்திலுள்ள பரிசு த்தவான்களைப் போல, நானும் என்னைத் தாழ்த்தி, ஒரு புதிய ஆரம்பத் திற்காக காத்திருக்கும் பொறுமையைத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:28-31