புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 03, 2019)

கர்த்தருடைய பாதுகாப்பு

சங்கீதம் 34:7

கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.


ஒரு தேசத்தை அந்நிய நாட்டின் படைகள் முற்றுகை போட்டிருந்த தால், கடல், வான், தரை சார்ந்த போக்குவரத்து ஸ்தம்பிதமானது. இத னால் அந்நாட்டின் வியாபாரங்கள் ந~;டப்பட ஆரம்பித்தது. விவசாயம் செய்வதற்கு வயல்களுக்கு செல்லமுடியவில்லை. மீன்பிடிக்கின்றவர் கள் கடலுக்கு செல்வது படிப்படியாக குறைய ஆரம்பித்து, பண்ணை களிலே மிருக ஜீவன்கள் அழிந்து கொண்டே போயிற்று. வைத்திய சாலை கள் இயங்குவதற்கு வேண்டிய மருந் துப் பொருட்களும், உபகரணங்களும் வருவது தடை செய்யப்பட்டாயிற்று, மின் சார வசதிகளும் துண்டிக்கப்பட்டாயிற்று. தேசத்தின் அதிகாரிகளும், திரளான செல்வம் உள்ளவர்களும், செல்வாக்கு நிறைந்தவர்களும், கொள்வனவு செய் ய முடியாத நாட்களும், தங்கள் வீடுகளிலே பாதுகாப்போடு இருக்க முடியாத நாட்களுமாயிருந்தது. ஆம் பிரியமானவர்களே, எந்த ஒரு தேசத்தின் தலைவனுக்கும் ஏனைய தேசங்களைவிட படைப்பலம் மிகுதியாக இருக்கலாம் ஆனாலும் யுத்த நாளிலே அவைகள் அவனை இரட்சிக்கமாட்டாது. உன்னதமானவர் மனு~ருடைய ராஜ்ய த்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் பராக்கிரமமுள்ள மனிதர்கள் தேசத்திலே இருக்கலாம், ஆனால் அவர்கள் பெலன் ஆபத்து நாளிலே அவர்களை விடுவிக்க மாட்டாது. எங்களுக்கு திரண்ட ஆஸ்தி இருக்கலாம், நாங்கள் பெரி தான கல்விமான்களாக இருக்கலாம், சமுகத்தால் புகழப்படும் பெரி தான அந்தஸ்து எமக்கு இருக்கலாம். ஆனால் இவையொன்றும் ஆபத்து நாட்களில் மனிதர்களுக்கு உதவுவதில்லை. கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத் திற்கு விலக்கி விடுவிக்கவும்;, பஞ்சத்தில் அவர்களை உயிரோடே கா க்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. கர் த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கின்ற மனு~னை கர் த்தருடைய தூதன் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப் பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். எனவே கர்த்தருக்கு பயந்து நடக்கின்றவனே மெய் ஞானமுடைய மனு~னாயிருக்கின்றான்.

ஜெபம்:

பரலோக தந்தையே, இந்த உலகிலே சிறந்தவைகள் என்று கருதப்படும் காரியங்களில் என் கண்களை பதிய வைக்காமல், உம்மு டைய பாதுகாப்புக்குள் நான் வாழ என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தானியேல் 4:29-37