புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 19, 2019)

விசுவாசம் என்னும் கேடகம்

1 யோவான் 5:4

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.


தேவன் விலக்கின மரத்தின் கனி எது என்பதை ஆதாம் ஏவாள் அறிந் திருந்தார்கள். அது தேவ கட்டளை. ஆனால் அவர்கள் அந்த கனியை ஒரு நாளும் புசிக்கவில்லை. புசிக்கும் நாளிலே நீங்கள் சாவீர்கள் என்று தேவன் கூறியிருந்தார். அந்த தேவ வாக்கை விசுவாசிப்பதே அவர்களுக்கு ஜீவனாக இருந்தது. இப்போது, இவர்கள் மனதிலே சந் தேகத்தின் வித்து விதைக்கப்பட வேண் டும் என்பதே பிசாசானவனின் நோக் கம். பிசாசானவன் ஏவாளை நோக்கி: அந்தக் கனியை புசிக்கும் நாளிலே, நீங்கள் சாகவே சாவதில்லை. நீங் கள் இதைப் புசிக்கும் நாளிலே உங் கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து, தேவர் களைப்போல் இருப்பீர்கள் என்றது. இந்த வஞ்சகமான வார்த்தைகள், தேவனுடைய வார்த்தையைப் பார் க்கிலும் வசீகரமாக இருந்ததால் ஏவாள் அந்த கனியை புசித்தாள். ஆதிமுதல், பிசாசானவனின் தந்திரம் இதுவே. உடனடியாக கிடைக் கும் மாம்சத்தின் இச்சையின் திருப்த்தியை, வஞ்சகமான வார்த்தைக ளைக் கொண்டு வசீகரமாக பேசுகின்றான். இந்த உபாயதந்திரங் களை நாங்கள் தேவன் பேரில் வைத்திருக்கும் விசுவாசத்தினால் மாத்திரமே ஜெயங் கொள்ள முடியும். இனி வரவிருக்கும் ஈடு இணை யில்லாத மகிமையை உறுதிப்படுத்திக் கொண்ட பரிசுத்தவான்கள், தற்காலத்திலே தாங்கள் அனுபவிக்கும் அற்பமான பாடுகளை பொரு ட்படுத்தாமல், தங்களுக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் பந்தயப் பொருளை நோக்கி முன்னேறிச் சென்றார்கள். எப்படியாக, அந்த பரிசுத்தவான்கள் வரவிருக்கும் மகிமையை கண்டு கொண்டார்கள்? தங்கள் விசுவாசக் கண்களால் அதைக் கண்டு கொண்டார்கள். வாக்கு ரைத்தவர் உண்மையுள்ளவர், அதை எனக்குத் தருவார் என்று விசு வாச கேடகத்தை எப்போதும் உயர்த்திப் பிடித்தார்கள். பிரியமானவர் களே, பொல்லாங்கன், இதைப் பார், இதைக் கேள், இதைப் பேசு, இதைச் செய், இதை சிந்தனை செய் என்று எப்போதும் வசீகரமாகப் பேசுவான். அதற்கு இடங்கொடுக்கும் போது, தேவனுடைய வாக்குத்த த்தம் உங்கள் வாழ்க்கையில் இரண்டாவதாகப் போய் விடும். என்ன தான் நடந்தாலும், தேவன் கூறிய வார்த்தைகளில் உறுதியாக நில்லு ங்கள். விசுவாச கேடகத்தை உயர்த்திப் பிடியுங்கள்.

ஜெபம்:

பரலோக தந்தையே, உம்முடைய வாக்கை எப்போதும் விசுவா சித்து, அதன்படி கிரியைகளை நடப்பிக்கவும், பிசாசானவன் போடும் வஞ்சகத்தை ஜெயங் கொள்ளவும் கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 11:1-40