புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 29, 2019)

கிறிஸ்துவின் பிரமாணம்

கலாத்தியர் 6:2

ஒருவர் பாரத்தை ஒரு வர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிர மாணத்தை நிறைவேற் றுங்கள்.


“உங்களை சில கிழமைகளாக சபையில் காணவில்லை, நான் உங்களுக்காக தேவனிடத்திலே விண்ணப்பம் செய்தேன்” என்று ஒரு தாயார், இன்னுமொரு சபை விசுவாசியிடம் கூறினார். ஆம்! சபை யிலே, விசுவாசிகளுடைய நலன் கருதி கரிசனையுடன் ஜெபம் செய் கின்றவர்கள் இருக்கின்றார்கள். உண்மையான அன்புள்ள இருதயத் தோடு சபையிலுள்ள விசுவாசிகளுக் காக பரிந்து பேசி ஜெபிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். சில வேளைகளிலே, ஒரு குடும்பம் யாரும் அறியாத, அறி யக்கூடாத, வெளியே சொல்ல முடி யாத பிரச்சனைகள் வழியாக கடந்து செல்லும் போது, அவர்கள் நிலையை, ஆவியிலே நிதானித்தறிந்து, யாருக்கும் எதையும் கூறாமல், தேவனிடம் அந்த குடும்பத்திற்காக ஜெபம் செய்கின்றவர் கள் இருக்கின்றார்கள். இத்தகைய நிக ழ்வுகள், சபை ஐக்கியத்தின் நன்மைகளில் ஒன்று. ஆதியிலிருந்து, பிசாசானவன், மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்குவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றான். அது மட்டுமல் லாமல், மனிதன் இன்னுமொரு மனிதனுடன் ஐக்கியமாயிருப்பதை பிசா சானவன் விரும்புவதில்லை. ஏனெனில், தூய்மையான உறவிலே பல நன்மைகள் உண்டு, பிசாசானவன் நன்மையை வெறுக்கின்றான். சபை யின் ஆரம்ப நாட்களிலிருந்து இன்றுவரை சில மனிதர்கள், ராஜ்ய ங்கள், அரசாங்கங்கள், கூடி ஆராதிப்பதை தடை செய்து வருகின்றா ர்கள். ஏனெனில் ஒன்றித்து கூடியிருப்பதின் பெலத்தை அவர்கள் விரும்புவதில்லை. சபை வழியாக கிறிஸ்துவின் பிரமாணம் நிறைவே ற்றப் பட்டு வருகின்றது. பெலவீனர் தாங்கப்படுகின்றார்கள், ஜனங்கள் சீர்பொருந்துகின்றார்கள், தேவ வழியில் நடக்க போதிக்கப்படுகின் றார்கள், பல ஆதரவுகளை பெறுகின்றார்கள், கவலையில் தேற்றப்ப டுகின்றார்கள், பிழைகளை எவை என கண்டு கொள்கின்றார்கள், பிள் ளைகள் தேவ பயத்தில் வளர போதிக்கப்படுகின்றார்கள் இப்படியாக அநேக ஞான நன்மைகள் சபை வழியாக சபையோருக்கு ஈவாக கொடுக்கப்படுகின்றது. இவைகள் வேண்டாம் என்று கூறி, தனித்து வாழ தீர்மானம் செய்யாதிருங்கள். நீங்கள் பிரிந்திருக்கும் போது, பிசாசானவன் உங்களை இலகுவாக வழி விலகப் பண்ணுவான்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, நாங்கள் பரலோகம் செல்லும்படியாக ஒரு மனதுடன், ஒன்றாய் கூடி, தூய உறவுடன் உம்மை சேவித்து, கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்ற என்னை வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலி 2:2