புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 16, 2019)

தேவனால் உண்டானவைகள்

1 பேதுரு 3:14

நீதியினிமித்தமாக நீங் கள் பாடுபட்டால் பாக்கி யவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறு த்தலுக்கு நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும் இருந்து,


தேவன் தாமே “தம்முடைய குமாரன் (இயேசு கிறிஸ்து) அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவ ர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலு க்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;. எவர்களை முன்குறித் தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கி னாரோ அவர்களை மகிமைப்படுத்தி யுமிருக்கிறார்.” என பரிசுத்த வேதாக மத்திலே வாசிக்கின்றோம். எனவே நாங்கள் யாவரும் தேவனால் அவரு டைய பிள்ளைகளாக அழைக்கப்பட்டி ருக்கின்றோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி அழைக்கப்பட்ட பிள்ளைகள் சிலருக்கு, பரிசுத்தவான் கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசே~ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறி ஸ்துவின் சரீரமாகிய சபையானது பக் திவிருத்தி அடைவதற்காகவும், பிரத்தி யேகமான சில பொறுப்புக்களை கொடு த்திருக்கின்றார். வேறுசிலர் சபையின் செயலாளராகவும், பொருளாள ராகவும் நியமிக்கப்படலாம். அப்படி நியமனங்களை பெற்றவர்கள் ஆண்டுகள் கடந்து சென்றபின், இந்த தெரிவு கர்த்தருடைய சித்தமோ அல்லது மனித திட்டமோ என்று சந்தேகம் கொள்ளாமல், அத்தகைய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள முன்பு, தேவ சமுகத்திலே ஜெபத்திலே தரித்திருந்து, தாங்கள் ஏற்கவிருக்கும் பொறுப்பை உறுதி செய்ய வேண்டும். அப்படியாக அது தேவனுடைய ஏற்பாடு என்று உறுதி செய்து ஏற்றுக் கொண்டவர்கள், அந்த பொறுப்புக்களை முறைப்படி செய்ய எத்தனிக்கும் போது எதிர்ப்புக்களையும், பாடு களையும் சந்திக்க நேரிடலாம். உங்கள் அழைப்பு தேவனால் உண்டா யிருந்தால், இத்தகைய சவால்களை கண்டு சோர்ந்து போகாதிருங்கள். கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூ~pக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லு கிற வி~யத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களா யிருங்கள். தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்த மானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.

ஜெபம்:

நீதியின் தேவனே, நீர் என்னை நம்பித் தந்த பொறுப்பை, இந்த உலகத்தினாலுண்டாகும் உபத்திரவங்களினால் தவற விட்டுவிடாதபடிக்கு, கருத்தோடு செய்து முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 1:14-17