புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 25, 2019)

மகிமையில் சேரும் நாள் வரை

எபிரெயர் 10:36

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.


ஒரு காரியாலத்திலே முன்னெடுக்கப்பட்ட கம்யூட்டர் தொகுதி சம்ம ந்தமான செயற்திட்டமொன்று, ஆரம்ப நாட்களிலே மிகவும் சிறப்பாக சென்றுகொண்டிருந்தது. அந்த செயற்திட்டத்தில் பணிபுரிந்து வந்த குழுவினர் மகிழ்வோடு ஒருவருக்கொருவர் உதவி செய்து, ஒருவரை ஒருவர் பாராட்டி, கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை செய்து வந்தார் கள். சில மாதங்கள் சென்றபின்பு, கம்யூட்டரின் ஒரு தொகுதியில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால், தங்கள் நோக்கத்தை மறந்து, குற்றம் தங்கள் பெயரில் வரக்கூடாது என்பதை மைய மாக வைத்து, ஒருவரை ஒருவர் குற் றம் சுமத்த தொடங்கிவிட்டார்கள். ஒன் றுபட்டு வரும் பிரச்சனைகளை தீர்ப் பதற்கு பதிலாக, பிரச்சனைகளை மற் றவர்கள் மேல் போடுவதில் அதிக நேரத்தை செலவு செய்து வந்தார்கள். இவ்வண்ணமாக, எங்கள் மத்தியிலும், எல்லாம் சுமுகமாக போய் கொண்டிருக்கும் போது, ஒருவரை ஒருவர் பாராட்டி ஒருமனதோடு முன்னேறிச் செல்கின்றோம். ஆனால் ஒரு பிரச்சனை தலை தூக்கும் போது, எங்கள் பிரதானமான நோக்கத்தை மறந்து, பிரச்சனைகளின் மேல அதிக கவனத்தை எடுத்து கொள்ளவ தால், கசப்பும், பிரிவினையும் ஏற்பட்டுவிடுகின்றது. எங்களுக்கு முன் ஓடி ஜெயம் கொண்ட மேகம்; போன்ற திரளான சாட்சிகளை நினை த்துக்கொள்ளுங்கள்;, பல உபத்திரவத்தின் நாட்களைக் கடந்தார்கள். மிகுந்த போராட்டத்தைச் சகித்தார்கள். பலர் முன்னிலையில் வேடிக் கையாக்கப்பட்டார்கள். தங்கள் ஆஸ்திகளையும் சந்தோ~மாய்க் கொள்ளையிடக்கொடுத்தார்கள். இப்படியான சூழ்நிலைகளை நீங்க ளும் ஆரம்ப நாட்களிலே சந்தோ~மாக ஏற்றுக் கொண்டிருந்திருக்க லாம். ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். சோதனைகளின் மத்தியிலே பின்னிட்டு திரும்பா திருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்த ம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டி யதாயிருக்கிறது. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.”

ஜெபம்:

மகிமையின் தேவனே, சவால்கள் வாழ்க்கையில் நோக்கி வரும் போது, ஒன்றித்து, உம்மை நோக்கி பார்த்து, பெலனடைந்து, அவைகளை மேற்கொள்ளும்படியாய் என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளி 2:1-5