புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 22, 2019)

இளைத்துப் போய்விட்டேன்

எபிரெயர் 6:10

ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிர யாசத்தையும் மறந்து விடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.


காலங்களாக நன்மைகளை செய்தும் மனிதர்களுக்கு நன்றி இல்லை. நன்மை செய்தும் மேன்மை இல்லை. இப்படியாக அதிக உற்சாகத்து டன், பல வருடங்களாக நற்பணிகளை செய்து இளைப்படைந்த நிலை யில் இருக்கின்றீர்களா? ஒரு காரியத்திலே தவறிப் போய்விட்டதால், வலுவிழந்து போய்விட்டேன், இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற மனநிலை சில மனிதர்களை வாட்டுவ துண்டு. நடந்தவைகளை மாற்றும்படி பின்னிட்டு போகமுடியாது, தவறு செய் துவிட்டேன் இனி என்ன செய்வது என்று, அந்த குற்றத்திலேயே தரித்தி ருக்கவும் கூடாது. சிலுவையண்டை யில் வந்து தேவனிடத்திலே எங்கள் குற்றங்களை முழு மனதோடு அறி க்கை செய்து, இயேசுவை நோக்கி முன் செல்வதே கிறிஸ்தவ வாழ்க்கை. “ஏனென்றால், உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழிய ஞ்செய்ததினாலும், செய்து வருகிறதி னாலும் தமது நாமத்திற்காகக் காண் பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மற ந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ள வரல்லவே. எனவே நீங்கள் அசதியாயி ராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிற வர்களுமாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமு ண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிர தையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்” எனவே சோர்ந்து போகாமலும், நற்கிரியைகளை விட்டு ஓய்து போகாமலும், முன்னேறிச் செல்லுங்கள். கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்படுவது பாக்கியம் என்பதை உணர்ந்தவர்களாய், இனி வரவிருக்கும் பரலோக மேன்மையை, விசுவாசக் கண்களால், நோக்கிப் பார்த்தவர்களாய், உங்கள் ஜீவ யாத்திரையை தொடருங்கள். நீங்கள் பட்ட பிரயாசத்தை மறந்து போவதற்கு தேவன் மனிதன் அல்ல. அவர் உங்கள் நிலையை அறிந்தவராக இருக்கின்றார். சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை கொடுக்கும் எங்கள் தேவன் பெலன் தந்து நடத்துவார்.

ஜெபம்:

மனதுருகும் தேவனே, என்னுடைய நிலையை நீர் ஒருவரே நன்றாக அறிந்தவர். இளைத்துப் போய், பின்வாங்காமல், ஜீவ யாத்திரையை ஓடி முடிக்கும்படியான பெலத்தை தந்து நடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:29