புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 23, 2019)

நினையாத நேரம் வருவார்

மத்தேயு 24:42

உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்


இரவிலே, நகைமாடம் ஒன்றை பாதுகாக்கும்படி பணிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு சேவையாளர், இந்த இரவும் மற்ற இரவுகளைப் போல கடந்து விடும் என தன் இருதயத்தில் எண்ணிக் கொண்டு, தான் இருந்த நாற்காலியில் சற்று அயர்ந்து போனான். தற்செயலாக, அவ்வழியாக வந்த, நகைமாட உரிமையாளர், தன் கடையை சற்று பார்த்து செல்வோம் என்று சென்ற போது காவலாளன் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். பிரியமானவர் களே, இன்று நாங்கள் இருதயத்திலே வன்மம் கசப்பு, விரோதங்களுடன் படுக்கைக்குச் சென்றால், நடு இரவிலே, தேவனுடைய நாள் வருமாக இருந்தால், அவர் உங்களை எப்படியாக கண்டு கொள்வார்? நாங்கள் மாம்ச இச்சைக்கு இடங்கொடுத்து பாவம் செய்யும் போது, தேவனுடைய நாள் வந்தால், எங்களுடைய நிலை என்ன? எனவே தேவனுடைய நாள் திருடனைப் போல எங்கள் மேல் வராதபடிக்கு நாங்கள் விழிப்பு ள்ளவர்களாக இருக்க வேண்டும் என கர்த்தராகிய இயேசு கூறியிருக்கின்றார். நேற்றைய நாள் போல தான் இன்றும் இருக்கின்றது, இன்றைய நாள் போல தான் நாளையும் இருக்கும், கொஞ்ச நேரத்திற்கு அசதியாக இருப்போம் என்று கூறி, எங்கள் பரிசுத்தத்தை குலை த்துவிடக் கூடாது. பாவத்தை இருதயத்தில் தக்க வைத்துக் கொண்டு, பின்பு மனந்திரும்புவோம் என்று ஒரு போதும் எண்ணக்கூடாது. ஏனெனில், கர்த்தருடைய நாள் வருவது மட்டுமல்ல, இந்த பூமியிலே, தேவன் எங்களுக்கு குறித்த நாள் இப்போது முடிந்து, நாங்கள் இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்ல வேண்டியதாக இருந்தால், என்ன செய்வோம்? எனவே எப்போதும் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த உலகிலே வாழும்வரை, எங்களை நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு முடிவிராது, ஆனால், அவைகளை தேவ வாக்கின்படி மேற்கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் எங்கள் சிந்தையிலே எப்போதும் காணப்பட வேண்டும். பெலவீனம் தலை தூக்கும் போது, தேவனிடத்திற்கு திரும்புவதற்கு தாமதிக்கக்கூடாது. நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

ஜெபம்:

சத்தியமுள்ள தேவனே, நான் ஒருபோதும் பொய்களுக்கு உடன்படாதபடி, எப்போதும் உண்மையை பேசி உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - 1 தெச 5:2