புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 31, 2018)

நாட்களை எண்ணும் அறிவு...

சங்கீதம் 90:12

நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.


அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கிறபடி யால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர் என்று யோபு என்ற பக்தன் கூறினார். மேலும் தாவீது ராஜா தன்னு டைய சங்கீதத்திலே, “கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என் பதையும் எனக்குத் தெரிவியும். இதோ, என் நாட்களை நாலு விரற்கடையள வாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வை க்கு இல்லாதது போலிருக்கிறது. எந்த மனு~னும் மாயையே என்பது நிச் சயம். வே~மாகவே மனு~ன் திரிகி றான்;. விருதாவாகவே சஞ்சலப்படுகி றான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்” என்று பாடினார். ஆம் பிரியமானவர்களே, நாட்களை எண்ணும் அறிவு, காலங்களை அறிந்து கொள்ளும் ஞானம் எங்கள் யாவருக்கும் தேவை. இந்த ஆண்டும் மிகவும் விரைவாக முடிவுக்கு வந்து விட்டது. நாட்கள் வெகுவிரை வாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இயேசு தரும் ஆன்மீக மீட்பை பெற் றவர்கள், கடந்துபோன ஆண்டுகளை திரும்பிப் பார்த்து, துக்கங்கொ ண்டாடாதிருங்கள். ஒருவேளை கடந்த நாட்களில் மனவேதனைகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை கர்த்தரிடம் ஒப்புவியுங்கள். ஏனெனில் இனிவரப்போகும் நித்திய வாழ்வு மேன்மையானது. எனவே கத்தரு க்குள் எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். அவருக்கு நன்றி செலுத்துங்கள். யார் உங்களை கைவிட்டாலும், அவருக்குள் சந்தோ~மாக இருங்கள். தம்மை தேடுகிற யாவருக்கும் அவர் அருகில் இருக்கின்றார். ஒரு வேளை இயேசு தரும் ஆன்மீக மீட்பை நீங்கள் இன்னும் பெற்றுக் கொள்ளாவிடின், இதுவே நல்ல தருணம். இந்த உலகம் தரும் செல்வம், சுகம், இன்பம் யாவும் அநி த்தியமானவைகள் என்று உணர்ந்து கொள்ளும்படியாக நித்தியராகிய இயேசு ஆன்மீக இரட்சிப்பை கொடுக்க காத்திருக்கின்றார். இந்த உலக போக்கிலே வாழ்ந்து நாட்களை விரயப்படுத்தாமல், கர்த்தரை அறியும்படி அவர் தந்த சிலாக்கியத்திற்காக அவரைத் துதியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

ஜெபம்:

அன்புள்ள பரலோக தந்தையே, இந்த ஆண்டு முழுவதும் என்னை காத்து, உமது கிருபையினால் நாள்தோறும் என்னை நடத்தி வந்தீர். நீர் செய்த எல்லா நன்மைக்கும் உமக்கு ஸ்தோத்திரம். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:1-8

Category Tags: