புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 17, 2018)

வேதனை நீங்கி,சுகமாயிரு!

மாற்கு 5:34

அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய் உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.


ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள வீட்டிற்கு இயேசு போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வரு~மாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண் டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, இயேசுவைக்குறித்துக் கேள்விப் பட்டு: நான் அவருடைய வஸ்திரங்க ளையாகிலும் தொட்டால் சொஸ்தமா வேன் என்று சொல்லி, ஜனக்கூட்டத்து க்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய உதி ரத்தின் ஊறல் நின்றுபோயிற்று. அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந் ததை அவள் தன் சரீரத்தில் உண ர்ந்தாள். உடனே இயேசு தம்மிலிரு ந்து வல்லமை புறப்பட்டதைத் தமக் குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார். தன் ஆஸ்திகளை எல்லாம் வைத்தியத்திற்காக முற்றாக செலவழித்து, வைத்தியர்களால் கைவிட ப்பட்ட இந்த ஸ்திரியின் விசுவாசம் பெரியது. தன்னால் செய்யக் கூடிய கடினமாக காரியங்கள் யாவையும் செய்து, வேதனையோடு வாழ்ந்து கொண்டிருந்த இந்த ஸ்திரியின், பெருந் தொகை பணத் தால் சம்பாதிக்க கூடாதிருந்த ஆரோக்கியத்தை, ஒரு நொடிப்பொழு தில் விசுவாசத்தினால் பெற்றுக் கொண்டாள். முழு மனதோடு தேவ னிடத்தில் கேளுங்கள், அவர் தம்மண்டை வந்த ஒருவனையும் புற ம்பே தள்ளுவதில்லை என பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கிறோம்.

ஜெபம்:

சுகம் தரும் தெய்வமே, நீர் சொல்ல ஆகும். நீர் கட்டளையிட நிற்கும். உம்முடைய வார்த்தையின் வல்லமையை உணர்ந்து, அதை விசுவாசித்து, தெய்வீக ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்..

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:14

Category Tags: