புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 26, 2018)

திடமனதாயிருங்கள்...

சங்கீதம் 31:24

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.


கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, இந்த பூவுலகிற்கு தாம் வந்த நோக் கத்தை நிறைவேற்றிய பின், தம் சீஷர்களை அழைத்து, அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை குறித்து அவர்களுக்கு கூறினார். நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். இவைகளை சொன்ன பின்பு, அவர்கள் பார்த்துக் கொண்டி ருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்;. சீஷர்களோ, கர்த்தர் கற்பித் தபடி எருசலேமிற்கு சென்று, ஒருமன ப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலி லும் தரித்திருந்தார்கள். தேவனுடைய வாக் குத்தத்தம் நிறைவேறும்படி காத்திருந் தார்கள். தேவன் முன்குறித்த நாள் வந் தபோது, தம் வாக்குத்தத்தத்தை நிறை வேற்றினார். அதே போலவே எங்களு டைய வாழ்க்கையிலும் தேவன் தாம் முன்குறித்த காரியங்களை நிறைவேற்றி முடிப்பார். அவர் முடிவெடு த்தால் அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால், காத்திருக்கும் காலங்களில், பொறுமை இழந்து, நாங்கள் நினைத்தபடி செயற்படாமலும், சில மனிதர்களின் பரியாசத்தினால் பெலனற்றுப் போகாமலும் இருக்கு ம்படிக்கு, நாங்கள் ஜெபத்திலும், வேண்டுதலிலும், தரித்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், கர்த்தருடைய வசனத்தை வாசிப்பதிலும் தியானிப்பதிலும் கருத்தாய் இருக்க வேண்டும். ஏனெனில் எங்களுக்கு முன்பாக வாழ்ந்து, வெற்றி பெற்றவர்களைக் குறித்த வெற்றியின் இர கசியமும், தேவ வசனத்தை அசட்டை செய்தவர்களின் முடிவுகளும், சாட்சிகளாக கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த மேகம் போன்ற சாட்சிகளை உன்னிப்பாக கவனித்து, கர்த்தருக்காக பொறுமையுடன் காத்தி ருக்க வேண்டும். சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளை ஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவா ர்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழு குகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவன். நீர் சொன்னதை நிறைவேற்றி முடிக்கின்றவர் என்பதை உணர்ந்து உம்முடைய வேளைக்காக காத்திருக்க எனக்கு பொறுமை யைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 1:5