புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 18, 2018)

வார்த்தைகளின் வெளிச்சத்தில்

சங்கீதம் 101:3

தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.


முதலைகளுக்கும், பயங்கரமான வனவிலங்குகளுக்கும் அருகில் சென்று வீர, தீர செயல்களை காண்பிக்கும் ஒரு மனிதன் இருந்தான். அவ னுடைய பிரமிக்கத்தக்க வீரதீரச் செயல்களை பல நாட்டு மக்களும் கண்டு களித்தார்கள். சிலரோ, அந்த மனிதன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அந்த வனவிலங்குகளும், ஊர்வனவும், மனிதர்களோடு இடை ப்படுவதற்கு பயிற்றுவிக்கப்பட்டதாயிருந்ததாலும், அவைகளால் அந்த மனிதனுக்கு உயிர் ஆபத்து வரும் என்று கூறினார்கள். ஒரு நாள் அவன் இப்படியாக தன் வீரச் செயல்களை காண்பிக்க முற்பட்டபோது, எதிர்பாரத விதமாக, அவன் தாக்கப்பட்டு, அந்த இடத்திலேயே மரித்துப் போனான். அந்த மனிதன் மிகவும் சாதுரியம் மிக் கவன், வனவிலங்குகள், ஊரும் பிரா ணிகள், கடல் ஜந்துக்களுடன் இடைப் படுவதில் பல ஆண்டுகள் அனுபவ மிக்கவன். ஆனால் அந்த மிருகங்கள், ஜந்துக்கள், தாங்கள் குடிகொள்ளும் இடத்தில், மிகவும் பலமிக்கதாயிருப்பதால், அவைகளுக்கு கிடைக்கும் ஒரு சிறிய சந்தர்ப்பத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். பிரியமானவர் களே, இப்படியாகத்தான் பாவ இச்சைகளும் இருக்கின்றது. நாங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனால் அழைக்கப்பட்டவர்கள், அவரைச் நம்பி வாழ்பவர்கள். அதனால் நாங்கள் போய் பாவ இச்சைகளோடு வீரதீர செயல்களை காட்ட முற்படக் கூடாது. தேவனுடைய ஆலோச னையின்படி பாவ இச்சைகளுக்கு விலகியோடும்படி எச்சரிப்பு கொடு க்கப்படுகின்றது. நான் பரிசுத்தவான், நான் பெலமுள்ளவன், நான் பயமற்றவன் என்று சொல்லி, பாவ இச்சைகள் இருக்கும் இடங்களில் துணிகரமாக நிற்பவர்கள், அந்த படுகுழியிலே விழுந்து விடுவார்கள். அதனால் தான், தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட் டேன், வழிவிலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கின்றேன் என்று சங்கீத புத்தகத்திலே வாசிக்கின்றோம். எப்போதும் தீங்கிழைக்கும் பாவ இச்சைகளைவிட்டு விலகி ஓட வேண்டும். கர்த்தராகிய இயேசு வையே எங்கள் கண்முன் வைத்து, அவர் கூறிய வார்த்தைகளின் வெளிச்சத்தில் நாங்கள் எப்போதும் வாழ வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்த பிதாவே, தேவ வார்த்தைகளை அற்பமாக எண்ணி, உம் விருப்பமில்லாத இடங்களுக்கு நான் செல்லாமல், உம் வார்த்தையின்படி உமக்கு பிரியமானதை செய்யும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:19