புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 30, 2018)

பாக்கியம் பெற்றவர்கள்!

சங்கீதம் 146:5

யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.


கடந்த நாட்களை, மாதங்களை, வருடங்களை சற்று திரும்பிப் பாரு ங்கள். எப்படியாக நீங்கள் வாழும் சுற்றாடல் மாற்றமடைந்திருக்கி ன்றது. தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்வை பலவிதமாக மாற்றியிருக்கின்றது. இவற்றுள் வைத்தியதுறை மற்றும் தொடர்பு சாத னங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. சில தசாப்தங்களுக்கு முன்பி ருந்த சமுதாய வாழ்க்கை முறை மாற் றப்பட்டிருக்கின்றது. நவீன போக்குவர த்து வசதிகளும், பிரமாண்டமான கட்டி டங்களும் பெருகிக் கொண்டே போகி ன்றது. மனிதர்கள் தங்களுக்கு நேரமி ல்லை என்பதை பெருமிதமாக பேசிக் கொள்ளும் காலம் இது. இந்த நிலையை அபிவிருத்தி என்று மனிதர் கள் அழைக்கின்றார்கள். ஆனால் மனிதர்கள் முன்னொருபோதும் கேள் விப்படாத புதிய நோய்களும், மனித னுடைய ஆக்கங்களின் பக்க விளைவுகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றது. இயற்கை அனர்த்தங்களின் விளைவுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஆனால் யாவற்றையும் படைத்த எங்கள் தேவனாகிய கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயி ருக்கின்றார். அவர் அன்றும் இன்றும் பக்தியுள்ளவர்களை தமக்கென தெரிந்து கொள்கின்றார். தேவன்மேல் பக்தியுள்ளவர்களும் அன்றும் இன்றும் தேவனையே நோக்கிப் பார்க்கின்றார்கள். ஏனெனில் மனித னையும் பிரபுவையும் அவர்களுடைய ஆக்கங்களையும் நம்புவது விருதா என்றும், மனிதர்களின் வாழ்வு புல்லின் பூவைப் போல காய் ந்து உலர்ந்து போய்விடும் என்றும், அந்த நாளிலே அவன் யோசனை அழிந்து போய்விடும் என்ற அறிவை அடைவதற்கு, தேவன்தாமே, தம்முடையவர்களுக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை கொடுத்திருக்கி ன்றார். மனிதர்கள் தாங்கள் இந்த உலக முறைமையின்படி வாழ்க்கைத் தரத்தை எப்படி மாற்றி அமைத்தாலும், அவன் தன் ஆத்தும இரட்சிப்பை அடைய முடியாது. இந்த இரகசியத்தை தம்மை நாடித் தேடுகின்றவர்களுக்கு தேவன் வெளிப்படுத்தியிருக்கின்றார். இதை அறிந்த நீங்கள், அழைத்த தேவனை இன்னுமாய் இறுகப் பற்றிக் கொள் ளுங்கள். இந்த உலகத்திற்குரிய விவகாரங்களால் சோர்வடைந்து போகாமல், தேவனை நோக்கி பார்த்து முன்னேறுங்கள்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, மாறிப்போகும் இந்த உல கிலே,மனிதர்கள் மேல் என் நம்பிக்கையை வைக்காமல், நித்தியமான உம்மேல் என்றும் நம்பிக்கையாய் இருக்க அருள் செய்வீராக.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 3:5-6