புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 25, 2018)

நிர்ணயித்தபடியே நிலைநிற்கும்

ஏசாயா 14:24

நான் நினைத்திருக்கிறப டியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையி ட்டுச் சொன்னார்


ஒரு நாள், சாயங்காலத்தில், இயேசு தம் சீஷர்களை நோக்கி: “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என்றார். அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந் தார். அவர்கள் அவரை எழுப்பி: போத கரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கட லைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். பிரியமானவர்களே, காற்றும் கடலும் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிகின்றது என சீஷர்கள் பயந்தார்கள். கர்த்தர் ஒரு காரியத்தை சொன்னால் அது நிறைவேறும். அவர் செய்ய நினைத்ததை ஒருவரும் தடுக்க முடியாது. கடலிலே பிரயாணத்தை ஆரம்பிக்க முன், “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என்று இயேசு கூறினார். அவர் அக்கரைக்கு போக முடிவெடுத்தால், அது நிச்சயம் நிறைவேறும், அதை எவரும் அல்லது எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. கடலிலே தோன்றிய பயங்கரமான புயல் அவர் அக்கரைக்கு போவதை தடுத்து நிறுத்த முடியாது. அதே போலவே எங்களையும் பரலோகம் செல்லும்படியாக அழைத்திருக்கின்றார். எங்கள் வாழ்க்கையிலும் புயல் போன்று பயங்கரங்கள் வரும் போது, சூழ்நிலைகளை கண்டு அஞ்சாமல், எங்களை அழைத்த இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், அவர் என்னை குறித்து நிர்ணயித்த காரியங்கள் நிறைவேறும் என்று உறுதியாக அறிக்கையிட வேண்டும். இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கின்றேன் என்பவரை நோக்கிப் பார்த்து, விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருப்போம்.

ஜெபம்:

வாக்குமாறாத தேவனே, உலகிலே தோன்றும் பயங்கரங்களை கண்டு மருளாமல், நான் உறுதியாய் உம்முடைய வார்த்தையை பற்றிக் கொண்டு, முன்னேறிச் செல்ல என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மாற்கு 35:41