புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 03, 2018)

நியாயமான மனநிலை

லூக்கா 6:31

மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவ ர்களுக்குச் செய்யுங்கள்.


இந்த ஆண்டில், எனக்கு அதிகப்படியான மிகையூதியம் (Bonus) கிடைக்க வேண்டும் என்று ஒரு காரியாலயத்தில் வேலைபுரியும் ஊழியர் எதிர்பாத்திருந்தார். அப்படி அதிகப்படியாக கிடைக்கும் இடத்து, தன்னுடைய வீட்டை பரிபாலனம் செய்யும் தனது ஊழியனுக்கும் அதிக படியான அன்பளிப்பை வழங்க வேண்டும் என்று மனதில் எண்ணியிருந்தார். கொடுப்பதையும் பெற்றுக் கொள்ளுவதையும் குறித்ததான எங்கள் மனநிலையை சற்று ஆராய்ந்து பார்ப்போம். பொதுவாக, மனிதர்கள் தாங் கள் செய்யும் எந்த பிரயாசத்தின் பலனும் அதிகமாக இருக்கும்படி விரும்புவார்கள். முக்கியமாக தங்கள் வேலையில், தங்களுக்கு முன்குறிப்பி ட்ட ஊதியத்தைவிட அதிகமாக பெற் றுக் கொள்ளும் போது சந்தோஷமடைவார்கள். ஆனால் அதே நேரத்தில், தங்கள் வீட்டில் வேலைகளை செய்ய வரும் தொழிலாளர்களிடமிருந்து மிகக் குறைந்த விலையில் தங்களுக்கு திருத்த வேலைகளை செய்யும்படி கேட்டுக் கொள்வார்கள். அதாவது, நாங்கள் அதிக பணத்தை (வருமானம்) ஊதியமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதே நேரத்தில், நாங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் ஊதியம் (செலவு) மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். மற்றவர்கள் எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள் என்று இயேசு கூறினார். இந்த உலகிலே விற்பனை செய்வதிலும், கொள்வனவு செய்வதிலும் நாங்கள் சிலரால் ஏமாற்றப்பட்டிருக்கலாம். மற்றவர்களை ஏமாற்றுகின்றவர்கள் அதற்கு ரிய விளைவை குறித்த காலத்தில் கண்டு கொள்வார்கள். அப்படி சிலர் ஏமாற்றுவதால், நாங்கள் எங்கள் சாரத்தை இழந்து போகக்கூடாது. நாங்கள் எப்போதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதையே கருத்தாக கொள்ள வேண்டும். எங்கள் கொடுக்கல் வாங்கல் நியாயமானதாயும், உதாரத்துவமுள்ளதாயும் இருக்க வேண்டும். பரம பிதா எங்களை பிழைப்பூட்டுகின்றார் என்பதை மறந்து, நாங்கள் எங்கள் எண்ணப்படி அற்ப இலாபத்திற்காக ஆசை கொள்ளக் கூடாது. பெற்றுக் கொள்வதைப் பார்க்கிலும் கொடுப்பதே மேலானது. நன்மையை பெறவிரும்பும் நாங்கள் நன்மையையே செய்ய வேண்டும்.

ஜெபம்:

ஆசீர்வதிக்கும் நல்ல தேவனே, பலவிதத்திலே, எங்களுக்கு சேவை புரிவோர்கள், வேலை செய்வோர்களை நாங்கள் நியாயமான வழியிலே நடத்தும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருளும் இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப்போஸ்தலர் 20:35