புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 31, 2018)

பிள்ளைகளை வரவிடுங்கள்

மத்தேயு 19:14

இயேசுவோ: சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங் கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவ ர்களுடையது என்று சொல்லி..


ஒரு சமயம், சிறு பிள்ளைகளின்மேல் கைகளை வைத்து ஜெப ம்பண்ணுபடிக்கு அவர்களை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்;.  கொண்டுவந்தவர்களை இயேசுவின் சீ~ர்கள் அதட்டினார்கள். அப் பொழுது இயேசு தம் சீ~ர்களை நோக்கி: சிறுபிள்ளைகளை என்னி டத்தில் வருவதற்கு தடை செய்யாதிருங்கள் என்று கூறினார். இந்த சம்பவத்திலே, இயேசுவை நன்கு அறி ந்தவர்களே, சிறுவர்களை தடுத்து நிறு த்தினார்கள். இன்று நீங்கள் தேவனை அறிந்தவர்களாக இருக்கலாம், ஆனால் நீங்களும் உங்கள் வாழ்க்கை முறை யினால், உங்கள் பிள்ளைகளையோ அல்லது மற்றவர்களின் பிள்ளைக ளையோ, கர்த்தரிடம் சேர்வதை தடுத் துவிடாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதோ, பிள்ளைகள் கர்த் தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். என்று சங்கீதப் புத்தகத்திலே வாசிக்கி ன்றோம். மேலும், என்னிடத்தில் விசு வாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிற வன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமு த்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நல மாயிருக்கும் என்றும் இயேசு கூறியிருக்கின்றார். நேற்றைய நாளின் தியானத்திலே கூறப்பட்டபடி, பிள்ளைகளின் ஆத்துமாவுக்குரிய விடய ங்களின் முக்கியத்துவத்தை இன்று பல இடங்களிலே பெற்றோர்கள், பாடசாலைகள், அதிகாரங்களிலுள்ளவர்கள்  குறைத்துவிடுகின்றார்கள். அதனால் அவர்கள் இயேசுவைவிட்டு தூரம் சென்று விடுகின்றார்கள். சில வேளைகளிலே, வயதுக்கு வந்த மனிதர்களின் நெறிமுறையற்ற செயற்பாடுகள் பிள்ளைகளை சபை ஐக்கியங்களிலிருந்தே விரட்டி விடுகின்றது. இவர்கள் கூறுவதற்கும் செய்வதற்கும் எந்த சம்பந்த மும் இல்லை என்று சில பிள்ளைகள் சாட்சியிடுகின்றார்கள். எனவே, எந்த விதத்திலும், நாங்கள் பிள்ளைகளை இடறல் படுத்தாமலும், அவ ர்களை இயேசுவிடம் சேருவதற்கு தடைசெய்யாமலும் இருக்க வேண் டும். சின்ன வயதிலே அவர்கள் நடக்க வேண்டிய வழியாகிய இயே சுவை அவர்களுக்கு சொல்லிலும் செயலிலும் காண்பிக்க வேண்டும்.

ஜெபம்:

பரலோக தந்தையே, உம்முடைய சுதந்தரமாகிய, நீர் தந்த பிள்ளைகளை, நேரடியாகவோ, மறை முகமாகவோ எந்த விதத்திலும் இடறலடையும்படி செய்யாமல், உம்மிடத்தில் அவர்களை சேர்க்க உதவி செய்யும்.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 18:1-10