தியானம் (ஆவணி 14, 2018)
அவரே எங்கள் ஆறுதல்
2 கொரிந்தியர் 1:4
தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உப த்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.
எருசலேமிலே, பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளத்தருகே, முப்பத் தெட்டு வரு~ம் வியாதிகொண்டிருந்த ஒரு மனு~ன் இருந்தான். பண்டிகையின் நாட்களிலே அங்கே அநேகமாயிரம் ஜனங்கள் கூடி யிருப்பார்கள். யூத மதத் தலைவர்கள், பரிசேயர், சதுசேயர் எனப் பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், வேத வல்லுனர்கள் யாவரும் அங்கே கூடுவார்கள். ஆனாலும், இந்த மனித னின் வாழ்வு அங்குள்ள எவருக்கும் ஒரு பொருட்டாக தோன்றவில்லை. மனி தர்கள் கைவிட்டாலும், எங்களைப் படை த்த தேவன் மறந்து போவாரோ? ஒரு நாளும் மறந்து போவதில்லை. பண்டி கைக்கு சென்றிருந்த இயேசு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து கொண்டார். நீ சொஸ்தம டைய விரும்புகின்றாயா என்று இயேசு அவனைக் கேட்ட போது, எனக்கு உதவி செய்ய யாருமில்லை என்று அந்த வியாதிஸ்தன் கூறினான். அன்று இயேசு அவனுக்கு பூரண சுகத்தைக் கொடுத்தார். எங்களை நேசிக்கின்ற இயேசுவிடம் ஒவ்வொருவரின் கணக் கும் உண்டு. சில வேளைகளிலே, மனி தர்கள் மத்தியிலே உங்ளை அற்பமா னவர்கள் என்றுதள்ளிவிடலாம். அல் லது உங்களை குறித்த கரிசனை இந்த உலகிலே எவருக்கும் இல்லாதிருக்கலாம். ஒரு வேளை உங்கள் வாழ்வை குறித்த நம்பிக்கை உங்களுக்கே அற்றுப் போகலாம். இயே சுவை நோக்கிப் பாருங்கள். தன்னண்டை வந்த ஒருவரையும் அவர் தள்ளிவிட மாட்டார். இயேசுவிடத்திலே ஆறுதல் பெற்ற நாங்கள், மற்றவர்களுடைய உபத்திரவங்களிலே, அவர்களின் உபத்திரவத்திற் கான காரணங்களை பற்றி விமர்சிக்காமல், அவர்கள் ஆறுதலடை யும்படி இயேசுவண்டை அழைத்துச் செல்வோம்.
ஜெபம்:
ஆறுதலின் தெய்வமே, எங்கள் உபத்திரவ வேளையில், எங்களை நியாயந்தீர்க்காமல் நீர் மனதுருகி ஆறுதலைத் தருகின்றீர். அப்படிப்பட்ட நிலையிலுள்ளவர்களுக்கு நாங்கள் ஆறுதலாய் இருக்க கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 116:5